1/n முற்போக்காளரா கமல்ஹாசன்?

காலங்காலமாக திமுக, அதிமுக ன்னு மாத்தி மாத்தி ஓட்டு போட்டதெல்லாம் போதும்.இந்த தடவை கமல்ஹாசனுக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்ற கமல்ஹாசன் ரசிகர்கள்கிட்ட எதனால கமல்ஹாசனுக்கு ஓட்டுப் போடணும்னு கேட்டா அவர்கள் முன் வைக்கிற பதில்:
2/n 1.கமல்ஹாசன் எந்த மதத்தையும் ஆதரிக்காத ஒரு நார்த்திகவாதியாக இருக்கிறார்.

2.கமல்ஹாசன் என் கட்சியில் சாதிக்கே இடமில்லைன்னு சாதிக்கு எதிரா நிற்கிறார்..

3.கமல்ஹாசன் யார் ஊழல் செய்தாலும் தட்டிக் கேட்கிறார்..
3/n 4. கமல்ஹாசன் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு ஆதரவாகப் பெண்ணியம் பேசுகிறார்...

அப்புடின்னு கமல்ஹாசனுக்கான தரச் சான்றிதழை ரசிகர்கள் கொடுக்க, "இதையெல்லாம் கமல்ஹாசன் எத்தனை வருடமாகச் செய்றார்" என்று நாம் கேட்க,
4/n "அவர் தன் சினிமா பயணம் தொடங்கியதிலிருந்து சினிமா கருத்துக்கள் மூலமாகவே தன் முற்போக்குச் சிந்தனையை விதைத்து வருகிறார்" என்று கமல்ஹாசனைத் தாங்கிப் பிடிக்கும் ரசிகர்களில் ஒருவனாக அவர் அப்படி என்ன முற்போக்கு சிந்தனையைத் தன் படங்களின் மூலம் விதைத்தார்
5/n என்பதை நானே சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்...

அதனால் நானே சொல்றேன், கேளுங்க...

கமல்ஹாசன் பெரும்பாலும் தன்னை பெரியாரின் ஆதரவாளனாக, கடவுளை மறுக்கிற நார்த்திகவாதியாவே காட்டிக்கிறார்ங்கிறது எல்லாரும் அறிந்த விசயமே..
6/n அப்படி அவர் பெரியாரை முன்னிறுத்தி இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு என்ன செய்ய நினைக்கிறார் என்பதை அவரோட இரண்டு படம் தெளிவாக உணர்த்தும்.

1.தேவர் மகன்
2.தசாவாதரம்

முதலில தேவர்மகன் படத்துக்கு வருவோம்.
7/n அந்தப் படத்துக்கும், பெரியாருக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேட்பீங்க? சம்பந்தம் இருக்கு. பின்னாடியே வாங்க... அது என்னங்கிறதை சொல்றேன்...

தேவர் மகன் படத்துல சிவாஜி கணேசன் அவர்கள் இறந்த பிறகு "வானம் தொட்டுப் போன" அப்புடின்னு ஒரு பாட்டு வரும்.
8/nஅந்த பாட்டுல கமல்ஹாசன் அவர்கள் முடியெல்லாம் வெட்டி குளிச்சு முடிச்சு உடையெல்லாம் உடுத்திக்கிட்டு ஒரு போட்டோக்கு முன்னாடி வந்து நிற்பார். அந்த ஃபோட்டோ வேறு யார் போட்டோவும் இல்ல, சிவாஜி கணேசனும், பெரியாரும் இணைந்த மாதிரியான போட்டோதான் அது!
9/n அந்த ஃபோட்டோக்கு எதிரில் ஒரு புத்தகம் இருக்கும். அதை அவர் கையால் தொட்டுக் கும்பிடுவார். அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா? அந்தப் புத்தகம்தான் பெரியார் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த மனித விரோத பகவத் கீதை என்னும் புத்தகம்..
10/n நிற்க, இந்த இடத்துல எல்லாரும் நல்லா கவனிக்க வேண்டிய ஒரு விசயம் ஒன்னு இருக்கு.. அது என்னன்னா.. பெரியாரை பின்பற்றுவதாகச் சொல்ற ஒருத்தர் எதுக்காக, பெரியார் படத்தையும் காட்டி அவருக்கு முன்பே பெரியார் எதிர்த்த பகவத் கீதையைத் தொட்டுக் கும்பிடணும்?
11/n இங்கதான் திரு. கமல்ஹாசனின் பார்ப்பன யுத்தி ஒளிஞ்சிருக்கு. பெரியாரின் பெயரைச் சொல்லியே பெரியார் எதிர்த்த பார்ப்பனிய அரசியலை தானே செயல்படுத்த முனைவேன் என்பதே அவரது நோக்கமாக இந்தக் காட்சியில் அமைந்திருக்கும்.
12/nநீ என்னப்பா இப்புடி சொல்றே.. பகவத் கீதையைக் காட்டுறதாலேயே கமல்ஹாசன் பார்ப்பனியத்தை ஆதரிக்கிறார்னு நீ எப்புடி சொல்லலாம். இந்தப் படத்துல காட்டியிருக்கிறது தேவர் சமூகம்தானே.. தேவர் சமூகம் இந்துக்கள்தானே... அதனால, அவர் பகவத் கீதையைக் காட்டியிருக்கிறார்னு சிலர் கேட்கலாம்...
13/nஅதுக்கு என்னோட பதில்:

"தேவர் மகன்" படம், முழுக்க முழுக்க மறவர் சமூகத்தைச் சார்ந்த படம். எனக்குத் தெரிந்தவரை மறவர் சமூகத்தினர் வீட்டில் பகவத் கீதையே இருக்காது. வட மாவட்டங்களில் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி விரதம் பெரும் அளவில கொண்டாடப்பட்டாலும்,
14/nமறவர் சமூகம் அதிகம் இருக்கிற சிவகங்கை, இராமநாதபுரம் பகுதிகளில் புரட்டாசி விரதம் கொண்டாடப் படுவதில்லை. காரணம், இவர்கள் முழுக்க முழுக்க அசைவம் சாப்பிடக் கூடிய சிவ சமயத்தைப் பின்பற்றக் கூடியவர்கள்...
15/n அப்படியிருக்க கமல்ஹாசன் "தேவர் மகன்" படத்தில் பகவத் கீதையை வைத்திருப்பதே பார்ப்பனியத் திணிப்புதான். இல்லாத ஒன்றை இருப்பது போல் பகவத்கீதையை வைக்க வேண்டிய அவசியம் அவருக்கு எதனால் வந்தது? அவர் பார்ப்பனியத்தை நேசிப்பதால் அந்தத் தேவை அவருக்கு வந்தது என்பதே உண்மை.
16/n நீ என்னதான் வாய் கிழிய விளக்கமா சொன்னாலும் நாங்க கமல்ஹாசனைத்தான் ஆதரிப்போம்னு சொல்ற கமல் ரசிகர்களுக்கு இன்னொரு படத்திலிருந்தும் ஒரு விளக்கம் தர்றேன்... கேளுங்க..

கமல்ஹாசனோட திரைப் பயணத்துல கெட்டப்புகளுக்காக பேசப்பட்ட ஒரு படம் "தசாவதாரம்".
17/n இந்தப் படத்துல கமல்ஹாசன் யாருமே செய்யாத ஒரு பெரும் புரட்சியை செய்திருப்பார். இந்தப் புரட்சிக்கு இவர் பயன்படுத்திய ஆயுதம் "பெரியார்". இந்தப் படம் முழுக்க தன்னை நார்த்திகவாதியாக வலம் வரும் கமல்ஹாசனோட கதாபாத்திரத்தின் பெயர் "ராமசாமி".
18/n கடவுளை எதிர்த்த ராமசாமியை வைத்தே கடவுளை(ராமராஜ்ஜியத்தை) எதிர்த்தால் இந்த உலகமே அழிந்து விடும் என்பது போல் மிகச் சிறந்த அறிவியல் கதையை சொல்லியிருப்பார் அறிவாளி கமல்.
19/n சரி, இப்போ நேரா படத்துக்கு வருவோம்... இந்தப் படத்தோட கதையை சுருக்கமா சொல்லணும்னா எங்கள் வைணவ (பிராமணர்களை) மதத்தை எதிர்த்தால் இந்த உலகமே அழிவுக்கு நேரிடும் என்பதுதான் தசாவதாரம் சொல்கிற மூலக் கதை.
20/n இந்தப் படத்துல ஒரு சைவ மன்னன் வைணவ மதக் கடவுளான விஷ்னு சிலையை உடைத்து, இந்த அநியாயத்திற்கு எதிராக தட்டிக் கேட்கிற ஒரு சாது என சொல்லப்படுகிற கடலில் சிலையோடு கட்டி எறிந்து கொல்வதற்கு உத்தரவிடுவார்.
21/n இப்படிப்பட்ட பெரும் பாவச் செயலை செய்ததால்தான் பின்னாளில் பத்து அவதாரங்களாக பகவான் சுனாமியால் இந்த உலகை அழித்து பழி வாங்கிவிட்டதாகச் சொல்லியிருப்பார் இந்தப் பார்ப்பனக் கமல்.
22/n எதற்காக இந்தக் காட்சிகள்? உண்மையிலேயே ஒரு தமிழ் மன்னன் தன் மத வெறிக்காக இன்னொரு மதக் கடவுளின் சிலையை உடைத்தானா? அப்படியிருந்தால் யார் அந்த மன்னன்? என்பதற்கான பதிலை இதோ சொல்றேன், கேளுங்க...

இந்தப் படத்துல கமல்ஹாசன் காட்டியிருக்கிற மன்னன் இரண்டாம் குலோத்துங்கன்.
23/n இந்த மன்னன் சைவ மதத்தில் தீவிர நாட்டம் கொண்டவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தனது ஆளுமைக்குட்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலை விரிவுபடுத்துவதற்காக கோவிலில் புதுப்பித்தல் பணிகளை செய்வதற்காக
24/nஅந்தக் கோயிலைச் சுற்றி உள்ள சிலைகளில் கோவிந்தராஜர் பெருமாள் சிலையை தற்காலிகமாக இடம் மாற்றி வைத்தார்... இதுதான் உண்மையான வரலாறு. ஆனால் அதை பின்நாளில் பிராமணர்கள், குலோத்துங்கன் பெருமாள் சிலையை அகற்றி வைணவ மதத்தினரை கொடுமைப்படுத்தினான்;
25/nஅதன் காரணமாக வைணவத்தை சூத்திர மன்னன் எதிர்த்ததால் பின்நாளில் நோய்வாய்ப்பட்டு இறந்தான்... அதனால் அவன் "கிருமி கண்ட சோழன்" என அழைக்கப்பட்டான் என கட்டுக்கதையை உருவாக்கியதே இந்த பார்ப்பனர்கள்தான்...
26/nஇந்த உண்மைக்குப் புறம்பாண கதையைத்தான் கமல்ஹாசனும் 'தசாவதாரம்' என்ற பெயரில் படமாக எடுத்திருந்தார்.முந்தைய பார்ப்பனர்களின் கட்டுக் கதையிலாவது சைவ மன்னன் திருமாலை கடலில் எறிந்தான், அதை எதிர்த்த வைணவன் ராமானுசரை நாடு கடத்தினார் என்று 90% சதவீத பொய்யை எழுதியிருப்பர்.
27/n ஆனால், கமல்ஹாசனின் தசாவதாரத்தில் சைவ மன்னன் வைணவ ராமானுசரை சிலையோடு கட்டி கடலில் எறிந்து கொலை செய்து விட்டார் என்ற 100% சதவிகித பொய்யை படமாக எடுத்திருப்பார். அப்படி எடுத்தது மட்டுமில்லாமல், இந்த வைணவ/ பார்ப்பன விரோத பாவச் செயலால்தான்
28/n பெருமாளையும், பிராமணரையும் எறிந்த அதே கடலில் கிருமி பரவி சுனாமி என்ற பெயரில் இந்த உலகை அழிப்பது போல் மிகக் கேவலமான ஒரு புரட்டுக் கதையை படமாக எடுத்திருப்பார் மிஸ்டர் கமல். இதில் தன் குடுமியை மறைப்பதற்காக பெரியார் பெயரில் "ராமசாமி" என்கிற நார்த்திகவாதி வேசம் வேறு...
29/nதன் உடம்பெல்லாம் சாதி வெறி ஊறிப் போன ஒருவரால்தான் இப்படியெல்லாம் ஒரு பெரிய சமூகத்திற்கெதிராக படம் எடுக்க முடியும்.

கமல்ஹாசனுக்கு பெரியார் மீது பற்றெல்லாம் இல்லை. மாறாக, கமல்ஹாசனுக்கு பெரியார் மீது தீர்க்க முடியாத வன்மம்.
30/nபெரியார் தன் வாழ்நாளெல்லாம் இந்த தேசத்தைக் கெடுத்த பார்ப்பனர்களை கடுமையாக திட்டித் தீர்த்ததால் தன் சாதிப் பாசத்தை விட்டுக் கொடுக்க முடியாத கமல்ஹாசன் பெரியார் வேசம் போட்டுக் கொண்டு பெரியாரின் கருத்துக்களையும்,
31/n பெரியாரின் திராவிட அரசியலையும் பாழாக்கப் புறப்பட்டு வந்த பார்ப்பனப் பாம்பு என்றே சொல்லலாம்...

இந்தப் பார்ப்பனப் பாம்பு சமூக நீதி பேசுகிறதே என நம்பி அதற்கு பால் ஊற்றி வளர்த்தால்
32/n அந்தப் பாம்பு பாலைக் குடித்து விட்டுப் பின்னர் பசிக்கிறதென்று மொத்த தமிழகத்தையும் தின்று ஏப்பமிட்டு ஆர்.எஸ். எஸ் என்ற மதவாத சக்திகளிடம் ஒப்படைத்துவிடும் என்பதே உண்மை. அதனால் பார்ப்பனரல்லாத கமல் ரசிகர்கள் கொஞ்சம் விழிப்புடன் இருக்கவும்.
33/n அடுத்தது, கமல்ஹாசன் எல்லா மதத்துக்கும் பொதுவானவர், அவர் இஸ்லாமியர்களுக்கும் நெருக்கமானவர் என்ற கடைந்தெடுத்த பொய் ஒன்று வலம் வருகிறது... அந்தப் பொய்யிற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்...
34/n கமல்ஹாசன் தன்னுடைய கனவுப் படம் என்று சொல்லிக் கொள்வது 'ஹேராம்' படத்தைத்தான்... அது காந்திக்கு ஆதரவான படம், கோட்சேக்களுக்கு எதிரான படம் என்றே அவர் பல இடங்களில் கூறியதுண்டு. ஆனால், அந்தப் படம் முழுக்க முழுக்க கோட்சேக்களுக்கான படம்..
35/nஎப்புடி சொல்ற நீ? அந்தப் படம் இந்தியருக்குள் மதச் சண்டை வேண்டாம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற மதச்சார்பற்ற கருத்தைத்தானே இறுதியில் சொல்கிறது. காந்தியின் தேச தியாகத்தை உணர்ந்த ஒரு பிராமணர் மனம் திருந்தி காந்தியின் சீடனாக மாறியதாய்த்தானே கதை முடிகிறது என நீங்கள் நினைக்கலாம்.
36/n ஆனால், உண்மை அதுவல்ல.. கதை எப்படி முடிகிறது, என்ன கருத்தைச் சொல்கிறது என்பது முக்கியமில்லை... என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? எந்த இடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுதான் முக்கியம்..

அப்படி ஒரு இடம் இந்தப் படத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
37/nஅந்த ஒரு காட்சிக்காக நான் ஒரு வாரம் தூங்காமல் ஒரு தரப்பினர் மீது அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடும் கோபத்தில் இருந்திருக்கிறேன்.. பின்னாளில் அந்த கோபம் தேவையில்லாத ஆணி என உணர்ந்ததெல்லாம் எனது பகுத்தறிவின் பலன்...
38/nசரி, அது போகட்டும்.. எதற்காக அத்தனை கோபம்? கடும் கோபமடையச் செய்யும் அளவுக்கு அந்தக் காட்சியில் என்ன நடந்தது? சொல்கிறேன், கேளுங்கள்...

நாடு முழுக்க கடும் மதக் கலவரம் நடந்து கொண்டிருக்கும். கமல்ஹாசன் தன் மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியில் சென்றிருப்பார்.
39/nஅந்த சமயத்தில் வீடு புகுந்த இஸ்லாமியர் இந்துப் பெண்ணான கமலின் மனைவியைக் கொடூரமாகக் கற்பழித்து கொன்று விடுவார்கள். அந்தக் காட்சியை காணும்போது நமக்கெல்லாம் இரத்தம் பொங்க கண்ணீர் வந்து விடும்.
40/nஅந்தச் செயலை இஸ்லாமியர்கள் தன் மத வெறிக்காக செய்ததாகக் காட்டியிருப்பார். அந்தக் காட்சியைக் காணும் சாதாரண ஆளுக்குக் கூட அந்தத் தவறைச் செய்தவர்கள் தனிமனித அயோக்கியக் கும்பல் என்பதை விட,
41/nமனசாட்சியில்லாத இஸ்லாமிய பயங்கரவாதிகள் எங்கள் இந்துப் பெண்ணை கற்பழித்துக் கொன்று விட்டனரே என்று ஒட்டு மொத்த இஸ்லாமியர்கள் மீதே கோபம் கொள்ளச் செய்கிற காட்சிதான் இது!!

இதிலென்ன தவறிருக்கிறது... கமல்ஹாசன் நடந்ததை படம் எடுத்திருப்பார்
42/nஎன நீங்கள் கேட்பீர்களேயானால் அதற்கு எனது பதில்:

ஆம், கமல்ஹாசன் நடந்ததைத்தான் எழுதியிருக்க வேண்டும்.. நடந்து கொண்டிருப்பதைத்தான் எழுதியிருக்க வேண்டும்... ஆர்.எஸ்.எஸ் என்னும் சங்பரிவார் கூட்டங்கள் இஸ்லாமிய பெண்களை வலுக்கட்டாயமாகக் கற்பழியுங்கள்..
43/nஇஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி காதலித்து இந்து மதத்திற்கு மாற்றுங்கள் எனத் தங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உள்ளவர்களிடம் பயங்கரவாத சிந்தனையை விதைத்து மதக் கலவரம் செய்யத் துடிக்கின்றனரே அந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் சிந்தனைக்கு எதிராக அப்படி ஒரு காட்சி வைத்திருக்க வேண்டும்...
44/nஇந்த தேசத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் செய்த கொடுமைகளுக்கு எதிராக அப்படி ஒரு காட்சி அமைத்திருக்க வேண்டும். ஆனால், கமல்ஹாசன் செய்ததோ இந்த தேசத்தில் சிறுபான்மையினராக இருக்கக் கூடியவர்களை பயங்கரவாதிகளாகக் காட்டி அவர்களை முஸ்லீம் பயங்கரவாதிகள்
45/nஎன மக்கள் எண்ண வேண்டும் என்பதற்காகவே கமல்ஹாசன் அப்படி ஒரு உண்மைக்குப் புறம்பான காட்சியை அவர் எடுத்திருப்பார்.

விஸ்வரூபம் என்னும் திரைப்படத்தில் தான் எதோ தீவிரவாதிகளை உளவு பார்த்த உளவுத் துறை அதிகாரி போல்
46/nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் இப்படித்தான் உருவாகிறார்கள் என இஸ்லாமியர்களுக்கெதிரான கற்பனையான ஒரு கட்டுக்கதை உலக அரசியலை உருவாக்கினாரோ அப்படித்தான் தானும் ஒரு இந்திய ஆராய்ச்சியாளர் போல முன்னர் நடக்காததையெல்லாம் நடந்தது போல் ஹேராம் என்னும் இஸ்லாமிய எதிர்ப்புப் படத்தை எடுத்திருப்பார்.
47/nஅப்படி உண்மையிலேயே கமல்ஹாசன் மய்யத்தில் நிற்பவரென்றால் அவர் உலக அரசியல் ஆய்வாளராக ஆப்கானிஸ்தானிலும்,ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் பல லட்சம் பச்சிளங் குழந்தைகளையும், பெண்களையும் கொன்ற அமெரிக்கர்களுக்கெதிராகத்தான் முதலில் படமெடுத்திருக்க வேண்டும்...
48/nஉள்ளூர் அரசியலில் மாற்றம் பேசும் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கெதிராகவும், குழந்தைகளுக்கெதிராகவும் பயங்கரவாதத்தை விதைக்கு ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராகத்தான் படமெடுத்திருக்க வேண்டும்.. ஆனால், அவர் கையிலெடுத்திருப்பதோ இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்..
49/nபார்ப்பனர்களுக்கு ஆதரவான அரசியல்!! இந்த அரசியல்தான் கமல்ஹாசனின் மய்யமென்றால் அந்த மய்யம் தமிழகத்திற்குத் தேவைப்படாத ஒன்று என்பதை கமல்ஹாசனின் ஜால்ராக்கள் உணர வேண்டும்..

கடைசியாக, கமல்ஹாசன் ஆகச் சிறந்த பெண்ணியவாதி என்றெல்லாம் சொல்கிறீர்களே
50/nஅவர் எந்தளவுக்குப் பெண்ணியவாதி என்பதை ஆராய்ந்து பார்ப்போம்...

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு பெண்களைப் பற்றி ஒரு பெண்ணிய சிந்தனையுள்ள கருத்து ஒன்றை வெளியிட்டார்...

அது என்னவென்றால்,
51/nவீட்டில் சமையல் வேலை பார்க்கும் மனைவிக்கு ஆண்கள் அதற்கான சம்பளம் கொடுக்க வேண்டியது கட்டாயம் என்கிற சட்டம் அமலுக்கு வர வேண்டும்.." என புத்திசாலித்தான ஒரு கருத்தை அவர் சொன்னார். ஆனால் இங்கு, இந்தத் திராவிட மண்ணில் பல காலமாக
52/nபெண்கள் அடுப்பறையை விட்டு வெளியில் வந்து அக்னிச் சிறகுகளாக வலம் வாருங்கள் என்றுதான் சொல்லிக் கொண்டு வருகிறது. பெண்களை சமையலறையை விட்டு வெளி வரச் செய்து படித்துப் பட்டம் பெற்றுக் கொடுத்து அவர்களுக்கான தனி இட ஒதுக்கீடோடு
53/nஅவர்களை அதிகாரத்தில் உட்கார வைத்து அழகு பார்த்ததுதான் இந்த மண்ணின் சமூக நீதியாக இருந்து கொண்டு வருகிறது.

ஆனால், வீட்டில் கணவனுக்கு அடிமை வேலை பார்க்கும் பெண்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் எனச் சொல்வது மீண்டும் பெண்களை அடிமையாக்கும் ஆணாதிக்கச் செயல் இல்லையா?
54/nஅதைத்தான் கமல்ஹாசன் இன்டலக்சுவலாக சம்பளம் வாங்கி அடிமைப் பணி செய்யும் அடிமைகளாகப் பெண்களை மாற்ற நினைக்கிறார் போல!!

இதை கமல்ஹாசனை ஆதரிக்கும் சில பெண் ரசிகைகள் புரிந்து கொண்டு கமல்ஹாசனுக்கு எதிரான அரசியலில் ஒன்றாகக்
55/nகை கோர்த்து நிற்பதே அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்ததாக இருக்கும்..

மேலே சொல்லப்பட்டது மட்டுமல்ல, சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் பேசிய காணொலி ஒன்று வெளியாகியது.
56/n அதில் கமல்ஹாசனிடம் ஒரு நிருபர் கேட்கிறார், பெண்களுக்கெதிரான குற்றங்களை எப்படி தடுப்பது என்று?? அதற்கு கமல்ஹாசன் சொன்ன பதில்:

ஒரு ஆண் ஒரு பெண்ணை கேலி செய்கிறானென்றால் அவனைக் கண்டு கொள்ளாமல் ஒரு பெண் முகத்தைத் திரும்பி கடந்து செல்ல வேண்டும்..
57/nமாறாக அந்தப் பெண் அந்த ஆண்களிடம் பதிலுக்குக் கிண்டல் செய்வது போல் முகத்தை சுழிப்பது, முக சைகையால் கேலி செய்வது அந்த ஆணை தப்பான எண்ணத்திற்குக் கொண்டு செல்லும் என மகா மட்டமான பதிலை கூறியிருப்பார்.
58/nஎங்கள் கிராமங்களிலெல்லாம் அத்தை மகன், மாமன் பொண்ணுகளுக்கிடையில் நக்கலான கிண்டலான பேச்சுக்கள் இருக்கும்.. அத்தை மகன், மாமன் பொண்ணு மட்டுமில்ல உறவு முறை இருக்கிற ஊர்ப் பெண்களிடம் மூக்கு சுளித்து, உதடு சுளித்து கிண்டலடித்து பேசிப் பழகுவார்கள்..
59/nஅதெல்லாம் படிக்காத கிராமத்து ஆண்களுக்கு ஒரு போதும் தவறாகத் தெரியாது. ஆனால் தன்னை இன்டலெக்சுவலாக சொல்லிக் கொள்கிற புத்திசாலி கமலின் ஏழாம் அறிவுக்கு பெண்கள் அப்படி ஆண்களிடம் கிண்டலாகப் பேசுவது
60/nஅவர்களை பாலியல் இச்சை செய்யத் தூண்டும் எனத் தோன்றுவதுதான் கமல்ஹாசனின் பெண்ணியம் குறித்தான மகா மட்டமான சிந்தனை... அதைத்தான் பார்ப்பனியம் கூறுகிறது. பார்ப்பனிய சிந்தனை கொண்ட பார்ப்பனியக் கமலும் எண்ணமும் இதுவே!!
61/nஅடுத்து, கமல்ஹாசனின் திரைப்படத்தில் நிறைய பெண்ணிய புரட்சி செய்திருக்கிறார்.

பம்மல் K சம்பந்தம், அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் இது போன்ற பல படங்களில் குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு பெண்களே மூலக் காரணம்
62/nஎன்பது போல் புரட்சிகர கதைகள் கொண்ட பல படங்களில் அவர் நடித்திருப்பதே கமல்ஹாசன் தன் திரைப் பயணித்திலும் பெண்களுக்கெதிராக எப்படி பெண்ணியம் பேசுகிறார் என்பதற்கான சாட்சி.
63/nஅவர் நடித்த 'தேவர் மகன்' படத்தில் கமல்ஹாசன் ஒரு பயில்வானோடு சண்டையிட்டு கமல் அதில் வென்ற பிறகு, அந்தப் பயில்வானுக்கு சேலை கட்டிவிட்டு நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து "சாந்து பொட்டு, ஒரு சந்தன பொட்டு எடுத்து நெத்தியில் வச்சுக்க மானே"
64/nஎன பெண் பிறப்பென்றால் ஒரு கேவலமான பிறப்பு என்பது போல் அந்தக் காட்சிகள் அமைந்திருக்கும். பெண்கள் குறித்தான இழிவான மனநிலை கொண்ட ஒரு ஆணால்தான் இப்படிப்பட்ட காட்சிகளை வைக்க முடியும். அப்படிப்பட்ட பெண்ணை குறித்து கேவலமான பார்வை கொண்ட ஆணாகக் கமல்ஹாசன் உள்ளார் என்பதே உண்மை...
65/nஇது கமல்ஹாசனை ஆதரிக்கும் பெண் ரசிகைகளுக்கும் புரிய வேண்டும்.

இறுதியாக, ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்... திருமதி சசிகலா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருப்பினும், அவரை விமர்சன ரீதியாக விமர்சிக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட ரீதியில் தரம் தாழ்ந்து விமர்சிக்கக் கூடாது.
66/nஆனா, 30 வருசத்துக்கு முன்னாடியே இந்த வேலைக்காரிகளெல்லாம் அரசியலை விட்டு விலகியிருந்தா நாடு நல்லாயிருந்திருக்கும்.." என ஒரு பெண் மீது தரம் தாழ்ந்து இழிவாக விமர்சித்திருப்பது அவரது மட்டமான சிந்தனையை குறிக்கிறது.
67/nசெருப்பு தைப்பவர்கள் முதல் துப்புரவுப் பணியாளர்கள் வரை அதிகாரத்தில் வைத்து அழகு பார்த்த இந்த உலகத்தில் வேலைக்காரிகள் அதிகாரம் செய்யக் கூடாது என்பது போல் கமல் பேசியிருப்பது அவரது சாதிய எண்ணத்தையும், பார்ப்பன மன நிலையையும் உறுதி செய்கிறது!!
68/nஆகவே, கமல் போன்ற போலி சமூக நீதி பேசும் சமூக நீதிக்கெதிரான இந்த பார்ப்பனப் பாம்புகளின் விஷப் பற்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை... அதை இந்தத் தேர்தலிலேயே நாம் ஓரணியாக நின்று செய்வோம்..
69/n இப்படிக்கு,
கமலின் அரசியலுக்கு எதிராக நிற்கும் கமல்ஹாசனின் திரை ரசிகன்
நா.செல்வநாதன்.
You can follow @Nathan98847006.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: