🌺நவராத்திரி முதல் நாள்...🌺

மஹேஸ்வரி ரூபத்தில் துர்க்கை...

புரட்டாசி அமாவாஸ்யை முடிந்த மறுநாள் நவராத்திரி ஆரம்பிக்கிறது. இந்த முதல் திருநாளில் துர்க்கை அம்மன் மஹேஸ்வரி ரூபத்தில் எழுந்தருளி அனைவரையும் ரக்ஷிக்கிறாள்.
வடகிழக்கு என்று கூறப்படும் *ஈசானியம்* என்னும் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி தேவி.

இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலுக்குச் சான்று.
சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள்.

”ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை பாராயணம் செய்து வந்தால், கோபம் நீங்கி, சாந்தம் பெறலாம்.
“ஆயுர் தேஹி தனம் தேஹி
வித்யாம் தேஹி மஹேஸ்வரி
ஸமஸ்த மாகிலம் தேஹி
தேஹி மே பரமேஷ்வரி”

எல்லாம்வல்ல தாய் எனக்குச் சிறந்த ஆயுள், செல்வம், கல்வி எல்லாம் தந்து, நவராத்திரியை சிறப்பாகத் துவக்கிவைக்க வேண்டுமெனப் ப்ரார்த்திப்போம்🙏

நறுமலர் தூவிடு நற்காலை வணக்கம்...🙏

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: