அண்ணா பல்கலை கழகத்துக்கு Institutions of Eminence(IoE) தகுதியை வழங்குவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

IoE பற்றி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இருக்கும் சில புள்ளிகள்

மாணவர் சேர்க்கையில் அரசு தலையிட முடியாது. இட ஒதுக்கீடு என்னவாகும் என்று தெரியவில்லை

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1584239
நான்கில் ஒரு பங்கு வரைக்கும் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை தங்கள் விருப்பம் போல் வைத்துக்கொள்ளலாம்.
25 விழுக்காடு வரைக்கும் வெளிநாட்டு ஆசிரியர்களை பணியில் அமர்த்திக்கொள்ளலாம்
கல்வி நிறுவனம் தன்னிச்சையாக செயல் பட அதிகாரம் வழங்கப்படும். இதனால் மாநில அரசுக்கு கல்வி நிறுவனத்தின் மேல் இருந்த அதிகாரங்கள் எவையெல்லாம் பறிபோகும் என்பது இன்னும் தெளிவாக விளக்கப்படவில்லை.
மேலும், கல்வி நிறுவனம் தங்கள் விருப்பம் போல் நிதி திரட்டலாம். நிதி வழங்குபவர்கள் அதை தொண்டு நோக்குடன் வழங்குவார்களா, அல்லது கல்வி நிறுவனம் அவர்களுக்கு அதை என்ன முறையில் திருப்பி அளிக்கும் என்பது பற்றி இன்னும் தெளிவு படுத்தவில்லை.

https://www.ugc.ac.in/ioe/about.aspx 
Institute of Eminence தகுதி பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாய் நிதி வழங்குவோம் என்று ஆசை காட்டி, கல்வி நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றும் திட்டம் இது.

https://archive.pib.gov.in/newsite/erelcontent.aspx?relid=197278
அனைத்து அரசு பல்கலை கழகங்களுக்கு 1000 கோடி ஏன் வழங்க கூடாது?

ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி, மற்ற கல்வி நிறுவனங்களையும் அதில் படிக்கும் மாணவர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக ஒதுக்கி தள்ள காவிகள் எடுத்திருக்கும் அடுத்த முயற்சி இது.
You can follow @angry_birdu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: