வேதம் is a பூதம்!😂

கோயில் கருவறையில் சொல்லும் மந்திரங்கள்.. வேதம் கிடையாது!
Sanskrit சுலோகம் என்றாலே, வேதம் எ. கற்பனை செய்து கொள்ளாதீர்!:)

கருவறையில் சொல்லப்படுவது,
எளிய பிற்கால அர்ச்சனை/ துதிகள் மட்டுமே!

வேதங்கள்.. உருவ வழிபாட்டைப் பழிக்கின்றன!
(அதாதோ கர்ம ஜிக்ஞாச)
வேதங்கள் = உருவ வழிபாடு எதிர்ப்பவை!

न तस्य प्रतिमा अस्ति / ந தஸ்ய பிரதிமா அஸ்தி
(யஜூர் வேதம் 32:3)
இறைவன், பிரதிமையில் (சிலை) அடங்காது!

பிரதிமையில் அடங்க மாட்டான் எனில்..
கோயில்களில், ஏன் வேத பிராமணீயம்?😂

அங்கு தான் பார்ப்பனீய வரலாறு ஒளிந்துள்ளது!
ஆதிகுடி வழிபாட்டின் களவு!
உருவ வழிபாடும் பிராமணீயமும்!

अन्धं तमः प्रविशन्ति ये‌‍‌ऽसंभुतिमउपासते
அந்தம் தம
பிரவிசந்தி யே அஸம்பூதிம் உபாசதே
(யஜூர் வேதம்)

எங்குமுள இறையை நாடாமல்
கல்லை/பஞ்சபூதப் படிமத்தை ஆராதிப்போர்
இருள்/நரகம் புகுவர்!

நரகம் எ. சொல்லிட்டு
ஏனய்யா பிராமணர்கள்
உருவ வழிபாடு செய்கிறார்கள்?
பிராமணர்கள்.. கோயில்/ உருவ வழிபாட்டை..
வேத காலத்தில் எதிர்த்தவர்கள்!
கர்மாக்களே போதும் (அக்னி/ யக்ஞம்)
உருவப் பூசை தவறு! எ. மீமாம்சைக் கொள்கை!

ஆனால்.. அரசன் மூலமாகப் பீடம் ஏறினாலும்
மக்களின் சமூக அதிகாரம் கைப்பற்ற,
தங்கள் வேதத்தையே விடுத்து
ஆதிகுடி வழிபாட்டில் ஈஷிக் கொண்டார்கள்!
நடுகல், மாயோன்/சேயோன் வழிபாடு
மக்களிடம் பரவிக் கிடந்ததை
மாற்ற முடியாத வேதப் பார்ப்பான்..
தன்னை மாற்றிக்கொண்டான் அதிகாரத்துக்காக!

கர்மா/ மீமாம்சை
அக்னி, இந்திரன், மித்ரன், ஸோமன்
தங்கள் வேதக் கடவுள்களையே கைவிட்டு..

வேதம் -> புராணம் என்று மாறி
ஆதிகுடி வழிபாடு களவாடிக் கொண்டான்!
பிராமணீயத்துக்கு, கடவுள் முக்கியமல்ல!
பிராமணீயத்துக்கு, அதிகாரமே முக்கியம்!

அதனால் தான்..
தம் வேதக் கடவுள்களையே, கைவிட முடிந்தது!
ஆதிகுடி மக்களை, அடிமைப்படுத்த முடிந்தது!

வேதங்களில்.. ஒரு கோயில் கூட இருக்காது!
கோயில்/சிலை.. யாவும்
ஆதிகுடி மக்களின்.. நடுகல்/கோட்டங்களே!
எந்தக் கோயில் அர்ச்சகனுக்கும்
முறையாக வேதம் தெரியாது!😂

அவன் கோயிலில் சொல்வதெல்லாம்
எளிய தியான சுலோக/அர்ச்சனைகளே!

வேதம் சொல்ல
தனியாகத் திரிவேதி, சதுர்வேதிகள் உள்ளனர்!
பிராமணாள்லயே ஒசந்தவா!:)

அவர்கள், கருவறை நுழைய மாட்டார்கள்!
ஏனெனில்..
வேதம், உருவ வழிபாட்டைப் பழிப்பதால்!
எனவே.. கோயிலில் சொல்லப்படும்
ஸ்லோகம் யாவும்= வேதம்!
எ. பிழையாக எண்ணிக் கொள்ளாதீர்:)

In Fact, கோயிலுக்கும் வேதத்துக்கும்..
யாதொரு தொடர்பும் இல்லை!

கோயில் அர்ச்சக வேலைக்கு
வேதம் தெரிய வேண்டிய தேவையும் இல்லை!

வேத பாராயணம்
சிவாச்சாரிகள்/பட்டர்கள் செய்வதில்லை!
அது வேற பிராமணாள்!:)
வேத காலப் பிராமணர்கள்..

சமூக அதிகாரம் பெற விரும்பியதால்
வேதம்-> புராணம் எ. மாறிக் கொண்டனர்!
புராணம்= ஆதிகுடித் தெய்வம், திருட்டுக் கதை!

கோயில் அதிகாரம் பெற விரும்பியதால்
வேதம்-> ஆகமம் எ. மாறிக் கொண்டனர்!
ஆகமம்= ஆதிகுடிக் கோயில், திருட்டு முறை!

ஆகமத்தில், ஒரு மண்ணும் கிடையாது!
ஆகமம் வெறும் Factory Work Instruction தான்!
சாஸ்திர அந்தஸ்து கூடக் கிடையாது!

வேத/ புராண/ இதிகாச
ஸ்ருதி/ ஸ்மிருதி
எந்த வரிசையிலும், ஆகமம் இடம் பெறாது!

அய்யோ, ஆகமம் மீறல்..
என்று எவனாச்சும் போலி Sound விட்டால்
உன் ஆகமம்.. எந்த வேத/சாஸ்திரம்?
என்று கேளுங்க! பதில் வரவே வராது!😂
You can follow @kryes.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: