M.G. ராமச்சந்திரன் அவர்கள் செய்த #மாபெரும்தவறு.... #நினைக்கும்போதே #ஆத்திரமாக வருகிறது...
அது அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம்...
ஓராண்டுக்குள் திடீர் என அண்ணா மறைந்துவிட..
அடுத்த முதலமைச்சர் யார்?' என நாலா திசைகளிலிருந்தும் கேள்விவர..
நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர..
உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி...
அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்...
M.G.இராமச்சந்திரனைப்
போய் பார்” என்று அனுப்பி வைக்கிறார்.
உடனடியாக கருணாநிதி MGRயை சந்தித்து..
“எனது பேச்சும் மூச்சும் தமிழ் தமிழ்
என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எனது மனைவி மக்களை மறந்து, இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன்."
-என்று எதுகை மோனையுடன் MGRரிடம் பேச...
இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புரட்சித்தலைவர் MGR இப்படி சொன்னார்..
“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்.”
உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த
S.S.ராஜேந்திரனுக்குப் போன்செய்த பொன்மனச்செம்மல்..
“ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு ” என்று மட்டும் சொல்லிவிட்டுப்
போனை வைத்து விடுகிறார்...
சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு SSR இல்லம் வருகிறார் MGR
இலை போட்டு இனிய முகத்துடன் SSR தாய் , இருவருக்கும் பரிமாற, இந்த நேரத்தில் SSR MGR ரிடம்
“அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும் . என்னன்னு
சொல்லுங்க” என்கிறார்.
“கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் அமர விரும்புகிறார்...நானும் அமரவைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன்... அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள MLAக்களை கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்.” என்று MGR விளக்குகிறார்...
திகைத்துப் போன SSR
நிறைய விளக்கங்கள் சொல்லி, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.
MGR வாதம் செய்யவில்லை ;
வற்புறுத்தவில்லை. SSRரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்..
“நான் இப்ப சாப்பிடட்டுமா ? வேண்டாமா ?”
SSR வெகு நேர யோசனைக்குப் பின்
வேறு வழியின்றி சொல்கிறார்..
“சரி. நீங்க சாப்பிடுங்க.”
இப்படித்தான் முதலமைச்சர் பொறுப்பேற்கிறார் கருணாநிதி.
அதன் பின் நடந்ததை
நாடே அறியும்.
இந்த உண்மை எத்தனை திமுக காருக்கு தெரியும்..??
#ஏறிவந்தஏணியை #எட்டிஉதைத்தவர் கருணாநிதி. அதனுடைய பலனை அவரது குடும்பத்தார் அனுபவித்தே தீர வேண்டும்..
Whatsappல் நண்பர் அனுப்பியது🙏🙏
#MGRஐயா... #என்னாங்கய்யா.. #இப்படிபண்ணீட்டுபோய்டிங்க..??😔😔🙏🙏🙏
Kind Courtesy: கவிசரண்யா..and Kamatchi Thevar Maharajan
You can follow @YeskayOfficial.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: