

இருளர் (Irular/Irulas)
இவர்கள் தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடியினர் ஆவர்.மலை சார் பிரதேசங்களை வாழ்வியல் ஆதாரமாக கொண்டவர்கள். இவர்கள் பேசும் மொழி இருளா மொழியாகும். ஆயினும் தமிழ் நாட்டில் 180000+ இருளர்ளும் அதே போல கேரளாவில் 23000+ இருளர்ளும் உள்ளனர்.
அவர்களில் சுத்தமான தமிழ் மலையாளம் பேசாத சொந்த இருளா மொழி பேசுபவர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.
ஆனாலும் இருளா மொழி கொடுந்தமிழ் என்பதால் அதில் அநேகமான தமிழ் வார்த்தைகள் தான் இருக்கும். இதனை சிலர் பண்டைய தமிழ் எனவும் சிலர் செந்தமிழ் வடிவம் பெறும் போதே இக்கொடுந்தமிழும் இருளா மொழியாக
ஆனாலும் இருளா மொழி கொடுந்தமிழ் என்பதால் அதில் அநேகமான தமிழ் வார்த்தைகள் தான் இருக்கும். இதனை சிலர் பண்டைய தமிழ் எனவும் சிலர் செந்தமிழ் வடிவம் பெறும் போதே இக்கொடுந்தமிழும் இருளா மொழியாக
மாறியது என்று கூறுகின்றனர்.ஆயினும் இவர்களது மரபணு பரிசோதனை மூலம் இவர்கள் பண்டைய தமிழர்கள் அதாவது ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சிந்துவெளியில் குடியேறிய அதே தமிழ் இனத்தை சார்ந்தவர்கள் என்று நிரூபணமாகிறது.இவர்களது இன எச்சம் இன்றும் ஆபிரிக்காவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இருளர் என்பது "People Of Darkness" அதாவது இருண்ட மக்கள் கருமையான தோலை உடைய மக்கள் எனப்பொருள் படும். இவர்கள் பேசுவது ஏன் கொடுந்தமிழ் எனப்படுகிறதென்றால் பண்டைய அறிஞர்கள் செழித்திருந்த தமிழ்நாட்டில் பேசும் மொழி அல்லது செழித்திருந்த மக்கள் பேசிய தமிழை செந்தமிழ் என்றனர் என்று
குறிப்பிருந்தது அதே போல நேர்த்தியான தமிழ் செந்தமிழ் என்றும் கிளைமொழி தமிழ் கொடுந்தமிழ் என்றும் பாகுபடுத்தினர். ஆனால் இருளர் வாழ்க்கை அவர்களை போன்றே இருள் சூழ்ந்து இருந்தது அன்று தொட்டு இன்று வரை அவர்களது வாழை செழிப்பானதாக இருக்கவில்லை. நவ நாகரிகமான தமிழர் வாழ்க்கை பற்றி கீழடி
ஆதிச்சநல்லூர் மூலம் அறிந்தாலும் இவர்கள் அன்று தொட்டு இன்று வரை வளர்ச்சியடைந்த தமிழர்களிடம் இருந்து விலகியே இருக்கின்றனர். இத்தனைக்கும் அவர்கள் தமிழினத்தின் தொன்மைக்கு சான்றாக இருக்கும் மூதாதைய இனம். "Ayyappanum Koshiyum" என்ற மலையாளப் படம் மூலம் தான் இவர்களை பற்றி நானறிந்தேன்
இல்லையென்றால் அவர்கள் யார் என்றும் அவர்கள் தமிழர்கள் என்றும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.உலகுக்கே தெரியும் கன்னடம் மலையாளம் தெலுங்கு எல்லாம் தமிழ் மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்று இதில் இருளர் தமிழர் என்பதில் வியப்பு ஏதும் இல்லை ஆனால் அவர்கள் பேசுவது தான் கொடுந்தமிழ்
என்பது வியப்பானது. இவர்களது வாழ்க்கை முறை வினோதமானது ஏனெனில் இவர்களில் சிலர் இன்றும் எலி பாம்பு போன்றவற்றை உண்கின்றனர்.அதை விட ஆண்களும் பெண்களும் மலையேறுவதில் கை தேர்ந்தவர்கள் அதே போல பனை ஏறுவதிலும் பெண்கள் திறமையானவர்கள்.அதே போல பனையால் செய்த பறி மூலம் நீந்தி மீன் இறால்
பிடிக்கும் வித்தையும் தெரிந்துள்ளார்கள். இவர்களை இந்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் இணைத்தது மட்டுமல்லாது இவர்களுக்கான சலுகைளகளையும் வழங்குவதில்லையாம் என்ற குற்றசாட்டை முன்வைக்கின்றனர். இவர்களை பார்க்கும் போதே இனம் புரியாத உணர்வு. பழந்தமிழர்கள் ஆயிற்றே
இவர்களின் மரபணு

இவர்களின் மரபணு
ஒத்தவர்கள் இன்றும் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல Aborigines என்று அவுஸ்திரேலியாவிலும் உள்ளனர்.
Source
(ஆப்பிரிக்கர்கள் தமிழர்கள் & அபொறியின்ஸ் மரபணு ஒற்றுமை)
#Kuinsan #குயின்சன்
Source

(ஆப்பிரிக்கர்கள் தமிழர்கள் & அபொறியின்ஸ் மரபணு ஒற்றுமை)
#Kuinsan #குயின்சன்