🙏திருத்தளூர் (திருத்துறையூர்) - சிஷ்டகுருநாதேசுவரர் திருக்கோயில்
🌺ஊர்: திருத்தளூர், 
திருத்துறையூர் எனவும் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ளது. பழைய பெயர் - திருத்துறையூர்
மூலவர்: 
சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்

அம்பாள்: சிவலோகநாயகி, பூங்கோதை

ஸ்தல விருட்சம்:கொன்றை

தீர்த்தம்: சூர்யபுஷ்கரிணி

வழிபட்டோர்கள் : சுந்தரமூர்த்தி நாயனார்
⭐ஸ்தலவரலாறு :  
சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு 'பித்தாய் பிறை சூடி பெருமானே' என பதிகம் பாடியபின்  திருவெண்ணெய் நல்லூரில் இருந்து சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார்.
அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார்.
🌸அப்போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார்.
🌻சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும் வயதான் தம்பதியைக் காணவில்லை. அப்போது "நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்" என்று அசரீரி வாக்கு கேட்க, சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார்.
🙏சுந்தரர் இறைவனை வணங்கி தனக்கு உபதேசம் செய்யும்படி கூறினார். சிவபெருமானும் சுந்தரருக்கு குருவாக இருந்து தவநெறி உபதேசம் செய்தார். எனவே தான் இறைவனுக்கு தவநெறி ஆளுடையார், சிஷ்டகுருநாதேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
👉இவ்வூருக்குக் அருகில் கீழப்பாக்கம் என்றொரு ஊர் உள்ளது.இங்கும் ஒரு சிவலிங்கம் உள்ளது. இவ்விடத்தில் தான் இறைவன் முதியவர் உருவில் சுந்தரருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்ததாகவும் பின்பு ரிஷபாரூடராக ஆலய விமானத்தில் காட்சி கொடுத்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது.
👉கோவில் அமைப்பு
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் எதுவும் இல்லை,ஒரே ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது,உள்வாயிலை கடந்து மண்டபத்தை அடைந்தால் இங்கு அருள் பாலிக்கும் இறைவன் மேற்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார்🙏
🌺அம்பாள் வடக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறாள். இவ்வாறு வடக்கு நோக்கிய அம்பாள் சந்நிதி காண்பது மிகவும் அரிது.
👉உட்பிரகாரத்தில் நர்த்தன கணபதி, பாலசுப்பிரமணியர், நடராஜர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டேச்வரர், ஆதிகேசவபெருமாள்,
கஜலக்ஷ்மி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
🌿இதில் தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமா மகேஸ்வரர் சுந்தரருக்குத் தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலமரம் கொன்றை உள்ளது.
🙏இத்தல இறைவனை சூரியன், பிரம்மா, விஷ்ணு, இராமர், சீதா, பீமன், அகத்தியர், நாரதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
👉கோவிலுக்கு வெளியில் உள்ள அஷ்டபுஜ பத்திரகாளி சந்நிதி மிகவும் விசேஷமான பிரார்த்தனை சந்நிதி. பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறுகிறது.
👉இங்கு முருகன் ஆறு முகங்களுடன் சுப்பிரமணியராக இருக்கிறார். அருணகிரியார் இவரை, “குருநாதர்” என்று திருப்புகழில் பாடியிருக்கிறார்.
🌺இங்குள்ள சுந்தரர், இடது கையில் செங்கோலை வைத்தபடி காட்சிதருகிறார். இவருக்கு மரியாதை செய்யும் விதமாக தலையில் தலைப்பாகை அணிவித்து அழகு பார்க்கின்றனர்.
🌞அதிசயம்
இங்கு சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.
👉தேவாரப்பதிகம்:
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித் திரிந்தல மாந்தர்
பூவார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

–சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.
⭐திருவிழா:

வைகாசி விசாகத்தில் 10 நாள் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, 
சிவராத்திரி, அன்னாபிஷேகம்.

பிரார்த்தனை:

குருதலம் என்பதால் இங்கு சிவன், தெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.
👉அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில், திருத்தளூர், 
திருத்துறையூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் மாவட்டம்.

+91- 4142 – 248 498, 94448 07393

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
🙏நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🙏🙏

அனைவருக்கும் ஈசன் அருள் கிடைக்க பிரார்த்தனைகள்🙏
You can follow @Ponniyi60491726.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: