முதல்வர் வீடு:- Thread

கிங் மேக்கர் கர்மவீரர் காமராஜர் ஐயா பற்றி Thread எழுத வேண்டும் என்றால் 100க்கும் மேற்பட்ட பதிவுகள் போடவேண்டிய வரும் அதனால் முதல்வர் வீடு என்ற தலைப்பில் மட்டும் எழுதி பிறந்தநாளுக்கு சமர்பிக்கிறேன்.

#HBDKamarajar
முன்னாள் முதலமைச்சர் வீடு என்றதும் உங்களுக்கெல்லாம் எங்கே போகும் என்று என்னால் யூகிக்க முடிகிறது,

அது கோபாலபுரம் வீடு அல்ல அது ஒரு விஞ்ஞானபூர்வமான அறிவிப்பு, எனக்கு பின் இந்த வீடு மருத்துவமனைக்கு என எழுதி வைத்தது எல்லாம் கருணாநிதியின் கைதேர்ந்த தில்லாலங்கடி வேலை தான்.
எப்படி என்றால் அவருக்கு பின் அந்த வீடு முரசொலி அறக்கட்டளைக்கு செல்லும் அதில் மருத்துவமனை இயங்கும் இப்படி தான் எழுதி வைத்தார் கருணாநிதி,

கருணாநிதிக்கு பின் அது எங்கே போனது? முரசொலி அறக்கட்டளைக்கு போனது, அதன் நிர்வாகி யார்?

-உதயநிதி
ஆக தாத்தா பேரனுக்கு எழுதி வைத்த சொத்துதான் கோபாலபுரம் வீடு அதையும் தமிழ்நாட்டுக்கு கொடுத்தார் கருணாநிதி என சொல்லி கொள்ளும் 200 ரூவா கொத்தடிமைகளை பார்த்தா செருப்பால அடியுங்க,

நான் சொல்ல வந்தது கர்ம வீரர் காமராஜர் ஐயா வீடு:- முதல்வர் வீடு
காமராஜர் ஐயாவுக்கு சென்னையில் வீடு கிடையாது,

அப்பொழுது கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனும் கிடையாது அரசியல் நாடோடியான காமராஜர் சென்னையில் அவர் குரு சத்தியமூர்த்தி வசித்த வீட்டில் வசித்திருக்கலாம்,ஆனால் அங்கு ஒரு நாள் கூட காமராஜர் தங்கியதில்லை
மாறாக எங்காவது கட்சிக்காரர் வீட்டு திண்ணையில் தங்குவதும்,

இல்லை "எக்ஸ்பிரஸ்" பத்திரிகை
அலுவலக மாடியில் இருந்த கட்சி அலுவகத்தில் தங்குவதுமாக காலம் கழிந்தது,

காலமெல்லாம் கட்சி, காந்தி, நாடு, விடுதலை போராட்டம் , மக்கள் சேவை என வாழ்ந்த ஆண்டியிடம் என்ன இருக்கும்?
1946ல்தான் இப்போதுள்ள வீட்டில் காமரஜர் கட்சிக்காரர்களால் தங்க வைக்கபட்டார் காரணம் அவர் அப்பொழுது காங்கிரஸ் தலைவர்.

உதவியாக சமையல்காரன் வைரவனும் அமர்த்தபட்டார் காமராஜர் வாரத்தில் பல நாட்கள் பரதேசியாக சுற்றுவார் எப்பொழுதாவதுதான் வருவார் வீட்டு வாடகையினை கட்சி செலுத்தி வந்தது
1954ல் முதல்வரானதும் அரசு சார்பில் வீடு ஒதுக்கபட்டது அது புறநகரில் இருந்ததாலும் சென்றுவர நேரம் என்பதாலும் மறுத்து இந்த வீட்டிலே இருந்தார் காமராஜர்,

வாடகையாக 160 ரூபாய் கொடுக்கபட்டது
இந்நேரம் வீட்டு உரிமையாளருக்கு சிக்கல் வந்தது, அந்த பங்களா வீடு பெரும் வாடகைக்கு செல்ல கூடியது,
அக்கம் பக்கம் 800 ரூபாய் வாடகை வந்தபோதும் காமராஜருக்காக 250 ரூபாயாக உயர்த்தினார்.

அவருக்கும் 800 ரூபாய் வாங்க ஆசைதான், அரசு சம்பளக்காரன் இவ்வளவுதான் கொடுக்கமுடியும் வாடகை படி அவ்வளவுதான் என சொல்லி அரசு பணத்திலும் சிக்கனம் பார்த்தார் காமராஜர்
பின் 1956ல் அந்த வீட்டை அரசுக்கே விற்க முன்வந்தார் அதன் உரிமையாளர் கோவிந்த ராஜூ விலை 60 ஆயிரம் ரூபாய்
காமராஜர் சொன்ன பதில் என்ன தெரியுமா இவ்வளவு ரூபாய்க்கு எனக்கு வீடா?

இதற்கு பதில் பத்து பள்ளி திறக்கலாம், வீடு வேண்டாம்"அந்த வீட்டு உரிமையாளர் பாடு திண்டாட்டமாயிற்று,
காமராஜரை தவிர யாருக்கும் விற்க மனமில்லை ஆனால் சொந்த சிக்கல்கள் அவரை விற்கும் முடிவுக்கு தள்ளின,முடிவில் அடமானம் வைத்தார்

அதை எடுத்தவர் பாப்பாலால் எனும் மார்வாடி, அவனுக்கோ வீட்டில் காமராஜர் இருப்பது தெரியாது சென்னையினை அதிகம் அறிந்தவனுமல்ல சொத்து அடமானம் வந்தது வாங்கினான்.
வாடகையினை காமராஜர் கட்டி கொண்டிருந்தார் அப்பொழுது திமுகவின் பிரச்சாரம் என்ன தெரியுமா?

மாடி வீட்டு கோமான் காமராஜரின் சொந்த பங்களாவினை பாருங்கள், இவரா எளியவர் கஷ்டம் அறிவார்,பார்ப்பண கோடீஸ்வரர்கள் விருந்துண்ணும் அரண்மனை அது
காமராஜர் கண்ணீர் விட்டார்
1972ல் நாகர்கோவில் இடைதேர்தலில் இந்த வீட்டு படமே வடசேரி நுழைவாயிலில் கருணாநிதியால் வைக்கபட்டு ஏழைபங்காளனின் வீட்டை பாருங்கள் என பிரச்சாரம் செய்தது #திருட்டு_திமுக

இவ்வளவு நடந்தும் முக ஸ்டாலின் திருமணத்துக்கு முதல் ஆளாக வந்திருந்தார் காமராஜர்.
1973ம் வருடம் அப்பொழுது காமராஜர் பதவியில் இல்லை வீடு ஏலத்துக்கு வந்தது,

அப்பொழுது வீடு காமராஜருக்கு என அறிந்த அந்த வடநாட்டு மார்வாடி இலவசமாக காமராஜருக்கே விட்டுகொடுக்க முன்வந்தார், ஆனால் மறுத்தார் காமராஜர்.

ஆம் வடநாட்டு மார்வாடியே காமராஜருக்கு இலவசமாக வீடு வழங்க முன்வந்த
பின்புதான் காங்கிரஸ்காரர்களுக்கு ரோஷம் வந்தது வீட்டின் விலை 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், இதை தமிழ்நாட்டில் வசூலித்து கொடுக்க குழு அமைக்கபட்டது,

காமராஜர் தெளிவாக சொன்னார் என் பெயரில் வீடுவேண்டாம் அப்படி இருந்தால் என் தங்கை குடும்பம் வாரிசாக வரும்,
கட்சி பெயரில் இருக்கட்டும் எனக்கு பின் சமையல்காரன் வைரவன் அங்கே உரிமையாக தங்கட்டும்,

எனக்கு சோறு போட்டவன் அவனே
என் அன்னை கையினை விட அவன் கைகளே அதிக காலம் சோறு போட்டது, அவனை அனாதையாக விட்டுவிடாதீகள் என்றார், காங்கிரஸில் வசூல் நடந்தது 1 லட்சம் திரட்டி கொடுக்கபட்டு,
மீதி திரட்டும் முன் காமராஜர் மரித்தார்
ஆம் வாடகை வீட்டில் ஒரு பரதேசி கோலத்தில் செத்துகிடந்தார் காமராஜர்.

எந்த வீட்டில் வாடகைக்கு சில வேட்டி சட்டையுடன் மட்டும் வாழ்ந்தபோதும் திமுகவினரால் சொந்தவீட்டில் சொகுசு வாழ்வு என பழிக்கபட்டாரோ? அங்கேயே செத்து கிடந்தார்.
அவர் நினைத்தால் அந்த வீட்டை வாங்கியிருக்கலாம், அரசு பணத்தில் அல்ல, தனக்கு நன்கொடையாக கிடைத்த பணத்தில் வாங்கியிருக்கலாம் ஆனால் தனக்கு எதுவும் அடையாளமாகிவிட கூடாது என நினைத்து அந்த நன்கொடை பணத்திலும் கட்சிக்கு நிலம் வாங்கி போட்டார், அதுதான் இன்றிருக்கும் சத்யமூர்த்தி பவன்
துறவிகள் தங்கள் கையில் எதுவும் வைத்திருக்கமாட்டார்கள், திருவோடு கூட சிலருக்கு இருக்காது காமராஜர் அவ்வகையில் அரசியல் துறவி,

அந்த கர்ம துறவியினை பழித்தே வளர்ந்தது #திருட்டு_திமுக அந்த வாடகை வீட்டிலும் தன் அன்னையினையோ உறவுகளையோ தங்க அனுமதிக்கவில்லை காமராஜர்.
வாழும்பொழுது சொந்த வீடு இல்லாத காமராஜருக்கு எமர்ஜென்ஸி காலம் முடிந்து MGR ஆட்சியில் அந்த வீடு வாங்கபட்டு காமராஜர் நினைவாலயம் ஆயிற்று,

காமராஜர் சொந்த வீடு என பொய் பிரச்சாரம் செய்த #திருட்டு_திமுக தமிழக அரசு அந்த வீட்டை விலை கொடுத்து வாங்கி பொழுது நவதுவாரங்களையும் மூடிக்கொண்டது.
தன் குடும்பத்தின் 10 கிளைகளுக்கும் 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்ட பின் 2012ல் கருணாநிதி சொன்னார் காமராஜரை எதிர்த்து அரசியல் செய்ததற்கு நான் வருந்துகின்றேன் என்று,

இந்த ஞானம் 1960லே இருந்திருந்தால் தமிழகம் எப்படி இருந்திருக்கும்?
காமராஜர் வாழ்ந்த அந்த வீட்டையும் பார்த்தால் நம்மை அறியாமல் கண்ணீர் வரும்
மிகபெரும் தியாக வரலாற்றை தாங்கி நிற்கின்றது அந்த வீடு,

இனிவரும் காலமெல்லாம் அந்த மனிதன் எவ்வளவு உன்னத தூய வாழ்வினை வாழ்ந்தான் என சொல்லிகொண்டே இருக்க போகும் வீடும் அதுதான்,

நன்றி
#HBDKamarajar
#SSR
You can follow @SSR_Sivaraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: