பிள்ளையார் சிலையினை செருப்பால் அடித்து உடைத்தான் ஈரோட்டு ராம்சாமி, அதன் பின்பே தெருவுக்கொரு பிள்ளையார் சிலை வந்து, விநாய சதுர்த்தியும் தமிழ்நாட்டில் பிரபலமாயிற்று

ராஜாஜி ஒருபடி மேல் சென்று "பிள்ளையார் பக்தி வளர்த்த ஆழ்வார் ராம்சாமி" என போற்றினார், ராம்சாமி மரத்தில் முட்டி முட்டி
அழுது கொண்டிருந்தது

பின் ராம்சாமி ராமன் படத்தை கையில் எடுத்தது அதன் பின்பே ராமர் கோவில் செய்திகள் தமிழகத்தை அடைந்து இன்று ராமனுக்கும் கோவில் என்றாயிற்று

இப்படி பல நன்மைகள் செய்யும் அக்கோஷ்டி இப்பொழுது செய்தது கந்த சஷ்டி கவச மறுமலர்ச்சி
இப்பொழுதெல்லாம் தமிழக வீடுகளிலும் ஆலயங்களிலும் காலை மாலையெல்லாம் கந்த சஷ்டி கவசம் அதிகம் ஒலிகின்றதாம், அதுவும் சத்தமாக ஒலிக்கின்றதாம்

அதுவும் ஒவ்வொரு வரியாக அர்த்தம் தெரிந்து தியானித்து படிக்கின்றார்களாம். எவ்வளவு நல்ல விஷயம்.

முன்பே சொன்னதுதான், சூரனையே மடக்கி தன் சேவலாக வைத்த
முருகன் இந்த கருப்பர் கூட்டத்தை விடுவானா?

அவர்கள் சேவை இன்னும் தொடரட்டும் , இங்கு தளர்ந்த விஷயமெல்லாம் மறுபடியும் மேலேறி ஜொலிக்கட்டும்

அந்த கருப்பர் கூட்டத்துக்கு முருக பக்தர்கள் சார்பாக வாழ்த்துக்கள், உங்களின் மேலான சேவை என்றும் தேவை..
You can follow @Wolfrik1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: