காமராஜர் 1965ல் போர்முனைக்கு சென்றாரா என்றால் சென்றார்

அந்த போர் காஷ்மிரில்தான் தொடங்கியது, சீனாவுடன் 1962ல் தோற்ற இந்தியா துவண்டிருந்தது போதாகுறைக்கு நேரு அங்கிள் வேறு காலமாகியிருந்தார்

(12/1)
இந்நேரம் படையெடுத்தால் இந்தியா அவ்வளவுதான் என சீனா கொடுத்த ஆலோசனையிலே பாகிஸ்தான் படையெடுத்தது, நிச்சயம் பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆதரவும் இருந்தது

ஆனால் சாஸ்திரியின் துணிச்சலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை,

(12/2)
இந்தியா எதிரியினை இருவழியில் பிரிக்க பஞ்சாபில் ஒரு போர்முனையினை திறந்து லாகூரை நோக்கி முன்னேறிற்று இதை பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை

இரு போர்முனை என்பதால் பாகிஸ்தான் திணறியது, இந்திய படைகள் பின்னி எடுத்தன‌

(12/3)
கண்ணதாசன் தன் பாணியில் "எல்லையில் வந்த எதிரிபடைகளை நம் படைகள் பந்து விளையாடுதம்மா" என அழகாக சொல்லிகொண்டிருந்தார்

பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் மரபு போர்முறையினை கைவிட்டு கொரில்லா தாக்குதலில் இறங்கியது,

(12/4)
ஆம் பாசுமதி நெல்லும் கோதுமையும் விளைந்திருந்த பஞ்சாபிய வயல்களுக்குள் அவர்கள் ஊடுருவி மறைந்திருந்து தாக்கினார்கள்

தியாகத்துக்கு பெயர் பெற்ற சீக்கிய மக்கள் வயல்களையோ கொளுத்தினார்கள், எரியும் வயலில் இருந்து தப்பி ஓடிய பாகிஸ்தான் வீரர்கள் ஏராளம்

(12/5)
தன் பலமாத உழைப்பை, பலனை நாட்டுக்கு தீயில் அம்மக்கள் கொடுத்தபொழுது காமராஜரும் அவர்கள் நடுவில் இருந்தார்

"கருப்பு காந்தியே,அவர்கள் உங்களை கொன்றுவிட்டால் சாஸ்திரிக்கு பலம் யார்? தேசத்துக்கு வழிகாட்டுவது யார்? என பஞ்சாபிய மக்களும் இந்திய வீரர்களும் கண்ணீரோடு கேட்டபொழுதுதான்

(12/6)
காமரஜர் அப்படி சொன்னார்

"நாட்டுக்கு சாகுறது பெருமைண்ணேன், வீரனோடு வீரனா செத்து கிடக்குறது பெருமைண்ணேன், வெள்ளைக்காரன விரட்டுனதுக்கு அர்த்தம் வேண்டாமாண்ணேன்"

ஆம் 1965ல் பஞ்சாபிய சகோதரர்கள் தங்கள் நெல்வயலை எரித்தார்கள்,ஆம் பாசுமதி வகையாறா அது, இது போக கோதுமை வயலும் ஏராளம்

(12/7)
போர் என்பதால் போக்குவரத்து இல்லை, அரிசியும் கோதுமையும் தட்டுபாடாயின, போர்காலம் என்பது அப்படித்தான்

தமிழகமும் சில அசவுரியங்களை சந்தித்தது

அப்பொழுதுதான் திமுக கொஞ்சமும் நாட்டுபற்று இல்லாமல் இந்திஎதிர்ப்பு எனவும், அரிசி பஞ்சம் எனவும்,

(12/8)
நாடார் வியாபாரிகளுக்கு ஆதரவாக அரிசி பதுக்க உதவினார் என நாக்கில் விஷத்துடன் பேசி திரிந்தன‌

அரிசிவிலை என்னாச்சி, பருப்பு விலை என்னாச்சி, பக்தவச்சலம் அண்ணாச்சி என அவை கவிதை பாடி திரிந்தன‌

(12/9)
சிந்திக்க தெரியா ஜனமும் அதை நம்பியது, போர் ஆயிற்றே எல்லையில் சிக்கலாயிற்றே இவர்கள் இப்படி வஞ்சகமாக சொல்கின்றார்களே என அவர்கள் சிந்திக்கவில்லை, இவர்கள் சிந்திக்கவிடவுமில்லை

ஜனமும் இவர்களை முழுக்க நம்பியது சோற்றுக்கு செத்தவன் தமிழன் என்பது அன்று உறுதியாயிற்று.

(12/10)
அந்த உற்சாகத்தில் சொன்னதுதான் ரூபாய்க்கு 3 படி அரிசி, அதை சொல்லி ஆட்சிக்கு வந்து அதை செயல்படுத்த முடியாமல் மாறாக வலுக்க செயல்படுத்த திறக்கபட்டதுதான் மதுகடைகள்.

திமுக இன்னும் அபப்டித்தான் இருக்கின்றது, அது அப்படித்தான் இருக்கும்

(12/11)
ஆனால் காமராஜரும் சாஸ்திரியும் இருந்த காங்கிரஸ் இன்று எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா? அதுதான் மகா மகா சோகம்..

(12/12)
You can follow @Samuelclicks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: