நாம் தமிழர் RSS - B teamனு சொன்னா, ஒடனே லைன்ல வர தம்பிகள் இங்கு வரவும்.

அதாவது அரசு முத்திரையில், தமிழக கோவிலான ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் இருக்காதாம். ஆனால் தமிழ் நாட்டுக்கு தொடர்பே இல்லாத, அசோக லட்சினை இருக்குமாம்.
வகுப்புவாரி இட ஒதுக்கீடு முறை அறவே ஒழிக்கப்படுமாம்.
ஏன்னா சாதி, இட ஒதுக்கீடுனால தான் வளருதாம். அதாவது சாதி சான்ற கிழிச்சு போட்டா சாதி ஒழிஞ்சிரும்னு சொல்லாம சொல்லிருக்காங்க.

இந்த அயோக்கிய தனத்திற்கு வழு சேர்க்க போலி புள்ளிவிவரம். அதிவும் சாதி இனவெறியை தூண்டும் வகையில்.
அப்புறம் ஆதி திராவிடர் நல விடுதி எல்லாம் நாம் தமிழர் ஆட்சில மூடிருவங்களாம்பா. பாத்துகோங்க.

இரு மொழி கொள்கை எல்லாம் இல்லையாம். இந்தி உட்பட மூன்றாவது ஒரு மொழிய பள்ளிகள்ல படிக்கணுமாம்.
இது தான் கொஞ்சம் என் அறிவுக்கு எட்டல. அதாவது நாம் தமிழர் ஆட்சில தனியார் பள்ளிகள் இருக்காதாம்.

ஆனா தனியார் பள்ளிகள்ல 12ம் வகுப்பு பாடத்தை 2 வருஷம் நடத்துரதால, நுழைவு தேர்வு இல்லாம இருக்குறது தனியார் பள்ளிகளுக்கு சாதகமா இருக்காம். அதனால எல்லா மேல் படிப்புக்கும் நுழைவு தேர்வாம்.
நுழைவு தேர்வு எத்தனை கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களை பொறியியல் படிப்பை நோக்கி அழைத்து சென்றது என்பதை சிறு குழந்தை கூட அறியும். அரசு பள்ளி SC/ST/MBC/BC மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதை தடுக்க முயல்பவர்கள் யார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
அப்புறம் ஹிட்லர் இவங்களுக்கு மேற்கோள் காட்டி சொல்ற அளவு மிக அரிய தலைவர் போல. ஹிட்லர் பேர மறைக்க கூட நாலு ஆளுங்கள சேத்துகிட்டாங்க போல.

அப்புறம் வழக்கம் போல முன்னோர்கள் முட்டாள் இல்ல குரூப்ப நம்ப வைக்க தமிழ் தேசிய மதுபானம்,தமிழ் தேசிய பயிர்னு சில மானே தேனே எல்லாம் சேத்துகிட்டாங்க.
ஒன்னு மட்டும் தான் இப்ப வர புரியல. அதாவது நாம் தமிழர் ஆட்சில வெளிநாடு வாழ் தமிழ்குடி மக்களுக்கு வாக்குரிமை கொடுப்பங்களாம். ஆனா என்ன சந்தேகம்னா,வெளிநாடு வாழ் தமிழ் குடிகளுக்கும்,விவரம் அறியா குழந்தைகளுக்கும் வாக்குரிமை கொடுக்காம எப்படி மொதல்ல நாதக ஆட்சி அமையும்🤔
You can follow @NeoDravidam.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: