நாடகமே உலகம்!!
கிறித்தவர்களும், வியாபாரிகளும் கோவில் நிலங்களை சுருட்டுவது சுலபம். சென்ட் ஜான் பள்ளியினர் பரவலாக OMR  உட்பட நிலம் வாங்கியிருக்கிறார்கள். அரசு பின்னணியுடன் கோவில் துறை 'வருக வருக என இவர்களை எதிர் கொள்கிறார்கள். இவ்வாறு சுருட்டப்பட்ட நிலங்கள், ஒன்றா இரண்டா என்ன?..1
HRCE எவருக்கும் அடங்காத ஓர் கொழுத்த பூதமாகி விட்டது. சராசரி மனிதன் சட்டத்தில் தண்டிக்க படுவான், இதை நாம் காண்கிறோம். தொடர் குற்றவாளியான அரசு பின்னணி கொண்ட துறை? வழக்குகள் கண் துடைப்புக்கான நாடக காட்சிகள். தோற்றாலும் வெற்றி எப்போதும் துறைக்குத்தான். செல்வாக்கில் நீதி மறைகிறது...2
ஹிந்துக்கள் எதையும் கண்டும் காணாதிருப்பதே இதற்கு காரணம். தட்டிக்கேட்பதில்லை. ஒருங்கிணைந்து வீதிக்கு வருவதில்லை. கோவில்களை விடுவிக்க மத்திய சட்டம் நாட்டுக்கு தேவை. அதிதுரித செயல்பாடுடன் பிரத்தியேக அந்தஸ்து படைத்த விசேஷ நீதி மன்றங்கள் உடனடியாக நம் மானிலத்துக்கு தேவை...3
பிப் 2018இல் சிவகங்கை சூரக்குடி தேசிகநாத ஸ்வாமி கோவில் வழக்கில் உயர்திரு நீதிபதி மஹாதேவனின் 'காணாமல் போன 50000 ஏக்கர் நிலங்களை விற்பனை ரத்து செய்து மீட்கவும், வாடகை பாக்கியை வசூலிக்கவும், தராதவர்களை வெளியேற்றவும்' என்ற ஆணை இன்று வரை நிறைவேற்ற படவில்லை. அரசு பலம் புரிகிறதா?...4
அரசை பொறுத்தவரை இது பொருட்படுத்த வேண்டிய விஷயமே இல்லை. 10000 வழக்குகளையும் இவ்வாறே கையாளும் திறமை அவர்களிடத்தில் உள்ளது. அதிகார பலம வெல்லும், கோவில்கள் இழக்கும், தமிழ் நாட்டின் தனி சிறப்பு. கோவில்களுக்கு அரசர்கள் காலத்திலிருந்து இன்று வரை கொடை அளித்த வள்ளல்கள் வெறும் ஏமாளிகள்...5
அன்றிலிருந்து இன்றுவரை வள்ளல்கள் கோவில்களுக்காக கொடுக்கப்பட்ட குளங்கள், அன்னதான கூடங்கள், சத்திரங்கள், வேத பாடசாலைகள், யாக சாலைகள், இசை கூடங்கள் இன்று அடுக்கு மாளிகைகளாக, கடைகளாக, சர்ச்சுகளாக, ஹோட்டல்களாக மாறிய அவலம் தமிழ்நாட்டு தனிச்சிறப்பு. முற்றிப்போன புற்றுநோய் எனலாம்..6
பிப் 1965இல் திருவாரூர் தருமை ஆதீனத்தால. தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 'மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், திருவண்ணாமலை, மன்னார்குடி ஆகிய 45 பெரும் கோவில்களை அரசு ஒட்டு மொத்தமாக எடுத்து கொண்டது சட்டமீறல், அது செல்லாது' என்ற ஆணையை நிதி மன்ற அவமதிப்பாக..7
இன்றும் தொடர்கிறது அரசு. இது மக்களிடையே இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு மிகப்பெரிய விஷயம். 1951 அறநிலைய (அறமற்ற) சட்டத்தின் புறம்பான ஷரத்துக்களை நிராகரித்து 1953இல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அவைகளை நீதிக்கு முரணாய் தமிழக அரசு 1959இல் புதிய சட்டம் இழைத்தது பெரும்சதி...8
வேலி பயிரை மேய்ந்தது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் நாம் காணமுடியாது.
இந்நிலையை முற்றிலும் மாற்ற வேண்டும். நம் நாட்டு நீதி அமைப்பு மாற்றப்பட வேண்டியது என்பதில் ஐயமே இல்லை. விழிப்புணர்ச்சியும், நியாயம், மற்றும் பொது நலத்துக்காக பங்கு வகிக்கும் எண்ணமும் நம்மில் வளர வேண்டும்...9
You can follow @RamananPr.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: