🌺மலத்தில் புரளு பன்றிக்கு மதுரகானத்தின் மகத்துவம் தெரியுமா??🌺

முன்பே கலாட்டா நெறியாளர் எனக்கூறிக் கொண்டு உளறிவரும் விக்ரமன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் தேவி அநுஸூயாவை, மூன்று இறைவனும் சேர்ந்து கற்பழித்ததாகவும், அதில் பிறந்த பிள்ளை யாருடையது எனத் தெரியாமல் அவர்,
மூவரும் வளர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதாகவும் பேசியிருக்கிறார்.

உண்மையான அநுஸூயா கதையில், அவள் மகத்துவத்தை அறிய மூவரும் அவளுக்கு சோதனை தருகின்றனர். மூவரும் ஸந்யாசிகளாய் வந்து, ஆகாரம் கேட்கின்றனர். அதுவும், வஸ்த்ரம் படாத பால், பழம் மட்டுமே உண்போம் என்கின்றனர். அநுஸூயா அவர்கள்
யாரென அறிந்து, அவளது கற்பு பலத்தால், அவர்களைக் குழந்தைகளாக மாற்றி, பால் பழம் தருகிறாள். அவளின் தூய தாயன்பால் மகிழ்ந்த இறை மூவரும், அன்னையைப் பிரிய மனமின்றி அவளுடனேயே தங்கி வளர்கின்றனர். இந்நிலையில், ப்ரும்மனின்றி ஸ்ருஷ்டி நின்றது. திருமாலின்றி ரக்ஷிப்பு நின்றது. மகேஸ்வரனின்றி
அழிப்பதும் நின்றது. அதே சமயம், இந்திரனும் அவளின் தாய்மை கண்டு ஒரு குழந்தையாக அவளிடம் இவர்களோடு வளர்ந்து வருகிறான். முப்பெரும் கடவுளர்களின் மனைவிகள், அவர்களை மீண்டும் அழைத்துச் செல்ல வருகின்றார்கள். அவர்கள் வருவது கண்டு மூன்று குழந்தைகளும் இந்திரனுடன் ஓடிப்போய்
அவள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழை மரங்களின் பின்னால் ஒளிந்து கொள்கின்றன. அநுஸூயாவும் தேவியர் மூவரும் வந்து தேட, இந்திரன் முதலில் அவர்கள் கண்ணில் பட்டு விட்டான். உடனே அவன் அவசரப்பட்டு, ”ந: இந்த்ரன்” (ந:-இல்லை இந்த்ரன்-இந்திரன்) அதாவது, நான் இந்த்ரன் இல்லை எனக்கூறி அழுகின்றான்.
அவனை அநுஸூயா தூக்கிக் கொள்கிறாள். அவன் மறைந்திருந்த வாழை அவன் பெயரில் “ந: இந்த்ரன்” எனப்பட்டு, ”நேந்திரன் பழம்” என்றானது.

ப்ரும்மா ஒளிந்திருந்த மரம் “பூவன் - பூவில் வசிப்பவன்” எனும் பெயரில் ”பூவன்பழம் / ப்ரும்மபழம்” என்றானது.

விஷ்ணு ஒளிந்திருந்த மரம் “முகுந்தன் பழம்” என
அவர் பெயரில் அழைக்கப்பட்டு, “மொந்தம்பழம்” என்றானது.

ஈஸ்வரன் ஒளிந்திருந்த மரம் “பேயன்” எனும் பெயர் கொண்டு, “பேயன்பழம்” என்றானது.

அவர்கள் தேவியரைக் கண்டதும், தங்கள் அன்னையின் பாசத்தை அநுபவித்த மகிழ்ச்சியோடு, அவளை நக்ஷத்ரமாக வாழ்வாய் என வாழ்த்தினர்.
அதுவே அநுஸூயா என்பது அனுஷ்ய நக்ஷத்ரம் என வழங்கப்படுகின்றது.

தாய்க்கும் வேசிக்கும் வித்யாசம் தெரியாத வளர்ப்பு. கட்டுமரத்தில் உட்காரத்தானே முடியும்? அதனால் தனக்குப் பழக்கப்பட்டது தானே கட்டுமரத்துக்குத் தெரியும்?

அதே தான் வாரிசுக்கும் தெரியும். புத்தி *கீழ் நோக்கி*😷 தான் போகும்.
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: