🌺Bharatha Varsham and Sanadhana Dharmam:🌺

பாகம் : 1 : 1

பாரத வர்ஷம் :

பாரத வர்ஷம் என்ற பெயர் ஏன் வந்தது என்பது பற்றி விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. அதிலுள்ள ஸ்லோக ஆதாரத்தைப் பார்ப்போம். அதன்படி,

பாரத வர்ஷம் என்ற பெயர் ரிஷபர் என்பவரது மகன் ப:ரத
என்பவர் பெயரால் உருவானது என்கின்றன புராண நூல்கள்.

விஷ்ணு புராணத்தில் (2,1,31)
வாயு புராணத்தில் (33,52)
லிங்க புராணத்தில் (1,47,23)
ப்ரம்மாண்ட புராணத்தில் (12,5,62)
அக்னி புராணத்தில் (107, 11-12)
ஸ்கந்த புராணத்தின் காண்டம் (37,57)
மார்க்கண்டேய புராணத்தில் (50,41)
ஆகிய இடங்களில் பாரத வர்ஷம் என்பது குறிப்பிடப் பட்டுள்ளது.

விஷ்ணு புராணத்தில்

ऋषभो मरुदेव्याश्च ऋषभात भरतो भवेत् I
भरताद भारतं वर्षं, भरतात सुमतिस्त्वभूत् II

ரிஷபோ மருதேவ்யாஸ்ச ரிஷபா:த ப:ரதோ ப:வேத் |
ப:ரதாத் பா:ரதம் வர்ஷம், ப:ரதாத் ஸுமதிஸ்த்வபூ:த் ||

ஸ்லோகம் - (2,1,31)
ரிஷபர் என்பவர் மருதேவிக்கும், ப:ரத என்பவர் ரிஷபருக்கும், ஸுமதி ப:ரதருக்கும் பிறந்தனர்.

இவர்களில் ப:ரத என்பவரிடம் இருந்து பா:ரத வர்ஷம் எனும் பெயர் தோன்றியது.

ततश्च भारतं वर्षमेतल्लोकेषुगीयते I
भरताय यत: पित्रा दत्तं प्रतिष्ठिता वनम II

ஸ்லோகம் - (2,1,32)
தத்ஸ்ச பா:ரதம் வர்ஷமேதல்லோகேஷுகீ:யதே |
ப:ரதாய யத: பித்ரா தத்தம் ப்ரதிஷ்டிதா வனம் ||

அப்படியாக பா:ரத வர்ஷம் என்னும் பெயர், ரிஷபர் தன் மகனுக்கு முடி சூட்டி, அவர் காட்டிற்கு ஞானத்தைத் தேடிப் போன பின் தான் வழக்கில் வந்தது.

பாரத வர்ஷத்தின் இதயம் என்று சொல்லப் படுவது ,
துனைக்கண்டம் எனப்படும் பரதகண்டம் ஆகும். எனவே அங்கிருந்து பாரத வர்ஷமானது, எது வரை இருந்தது என்பதை முதலில் பார்ப்போம். இந்தியாவின்

மேற்கில்

Iran, Baluchistan, Sumeria, East Saudi Arabia, Egypt, Libiya, Part of Algeria, Mali, Niger including today’s Caspian Sea (கஷ்யப சமுத்திரம்)
தென் மேற்கில்

Nigeria, Chad, Sudan. Yemen, Oman

( Sudan, Chad, and Nigeria ஆகியவற்றின் கீழே தற்போது வரைபடத்தில் உள்ள இடங்கள் வேத காலத்தில் சமுத்திரத்தின் அடியில் இருந்த நிலப் பகுதிகள். அவை பின்னாளில் பூகோள மாற்றத்தில் வெளியில் வந்தவை. )

வடக்கில்

Tajikistan , Kyrgyzstan
வட மேற்கில்

Pakistan, Afghanistan, Uzbekistan, Turkmenistan

(தற்போதைய Kazhkastan என்றழைக்கப்படும்; அந்நாளைய கேகய தேசம் [கைகேயி பிறந்த நாடு] கூட த்ரேதாயுகத்தில் வெளிவந்தவை தான் எனவும் ஒரு கூற்று உள்ளது.)

வட கிழக்கில்

North-West China Russia Tibet, Nepal and Bhutan.
கிழக்கில்

Bangladesh, Burma

தென் கிழக்கில்

Laos, Thailand, Vietnam, Cambodia, Malaysia, Singapore, Part of Indonesia and maximum part of Lemuria

ஆகிய இடங்களை உள்ளடக்கியது. இதில் லெமூரியா கண்டம் என்பது தற்போது கடல் கொள்ளப்பட்ட ஒரு நிலப்பரப்பு ஆகும்.
பாரத வர்ஷம் சில நூல்களில் அகண்ட பாரதம் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வாறு வேதகால புராணத்தில் பாரத வர்ஷம் என்றும், சமஸ்கிருதத்தில் சில நூல்களில் பாரத கணராஜ்யம் என்றும் கூட கூறப்பட்டுள்ளது.

(Source: http://www.ids.lib.harvard.edu )
கிட்டத்தட்ட பாரத வர்ஷம் முழுவதையும் வேத காலத்தில் ஒரே சக்ரவர்த்தியின் வழியில் ஆட்சி செய்திருப்பதாகத் தெரிய வருகின்றது.

சக்ரவர்த்திகளின் பரம்பரை மாறியிருக்கிறது. ஆனால், பாரத வர்ஷம் முழுவதுமாக ஒரு குடையின் கீழ் என்று சொல்லப்படும்,
ஒரு ஆளுமையின் கீழ் தான் இருந்தது என்பதை சில பல குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது. (ஆனால் அக்குறிப்புகள் எதன் அடிப்படையில் எடுக்க்கப்பட்டது என்பது அறிய முடியவில்லை.)

உதாரணமாக தற்போதைய மாநிலங்களின் முதல் மந்திரிகளும், நாட்டின் பிரதம மந்திரியும் போல.
எனவே ஆதாரப் பூர்வமாக மேலே தரப்பட்டுள்ள தரவுகள் மூலமாக, நமக்கு

“ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து, வட இந்தியாவிற்கு கைபர் போலன் கணவாய் வழியாக வந்தார்கள் ; மேலும் அவர்களே உலகின் பல பகுதிகளில் பரவினார்கள்” எனக் கூறப்பட்டு வந்தது ஆதாரமற்ற தத்துவம் ;
வெற்றுக் குழப்ப வாதம் என்பது புரிகிறது. இந்த வாதம் தற்போது தவிடு பொடி ஆவது ஏன் எனப் புரிகின்றதா?

”ஆர்ய” என்ற வார்த்தைக்கு சமஸ்க்ருதத்தில் “போற்றுதலுக்குரிய, மதிப்பிற்குரிய, பண்பட்ட, விவேகமுள்ள, பாண்டித்யமுள்ள” எனப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.
எனவே வட இந்தியாவில், இப்பேர்ப்பட்ட மனிதர்களை “ஆர்ய தேவ் / ஆர்ய புத்ர” என்று குறிப்பிடுவார்கள். அவ்வளவே!

இதனை முழுவதுமாகப் புரிந்து கொண்டு, உண்மையை மனதில் நாம் ஏற்க வேண்டும்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயாணன்🍁
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: