144 தடையுத்தரவு காரணமாக தமிழகத்தல் சிக்கிய மலேசிய நாட்டவர்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பயணம் செல்ல இருந்த 13 பேரிடம் நடத்திய சோதனையின்போது, அவர்கள் சுற்றுலா விசாவில் வந்ததும், டெல்லி மாநாட்டில் பங்கேற்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர்களை பூந்தமல்லி சிறப்பு முகாமுக்கு கொண்டு சென்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு பிரத்யேக உடை அணிந்த காவலர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்