*திரு இந்திரா சௌந்திர ராஜன்.
பதிவு

இந்த ஊரடங்கு நாட்களில் பலரிடம்
அய்யா கொரோனா எப்ப ஒழியும் ? என்று ஆரம்பித்து சீனா நல்ல நாடா கெட்ட நாடா என்பது வரை பல கேள்விகள்.
இதில் சிலர் 'எல்லோரும் உயிரோடு இருப்போமா? என்று கூட கேட்டு விட்டனர்.
ஒருவருக்கு தன் FDமேல் கவலை . புதிதாக ஒரு சட்டம் போட்டு அவ்வளவு பணத்தையும் அரசு எடுத்துக் கொள்ளப் போகிறது என்று யாரோ அவரை கிளப்பி விட்டுள்ளனர்.
இதெல்லாம் பரவாயில்லை , இனி இந்தியாவிலும் ராணுவ ஆட்சிதான் என்றும் ஒரு கூட்டம்.

விலைவாசி நம்மை எலிக்கறி தின்ன வைக்கும் என்றும் சிலரிடம் நல்லெண்ணம்.

*எல்லா கேள்விகளையும் நான் என் குருவின் முன் வைத்தேன். அவர் பல விதங்களில் பல நிலைகளில் எனக்கு பதிலளித்தார்*
*'கவலை படாதே , என்று தொடங்கினார்.*
*பாரத தேசம் எப்போதுமே ஒரு* *காய்த்த மரம். பல கல்லடிகள் அதற்கு இருக்கவே செய்யும்.*
*ஆனால் கல் வீசுபவர்க்கே*
*கை வலிக்க போகிறது.*
*நீ வேண்டுமானால் பார்.*
*விரைவில் இவர்கள் கைதட்டுபவர்களாக மாறுவர், என்றார்.*
இப்போது கூட
*கொரோனா யாருக்கு எப்படியோ நமக்கு அது நல்லதை மட்டுமே செய்துள்ளது இதை உன்னால் மறுக்க முடியுமா என்று கேட்டார்.* என்னுள் ஆச்சரிய அதிர்வுப் புனல்.

. *இந்த கொரோனா காலத்தில் விபத்து, கொலை என்று துர்மரணங்களே இல்லை கவனித்தாயா?* என்று கேட்டார். நானும் யோசித்தேன்.
*எல்லோரும் வீட்டில் இருப்பதால் திருடர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.*
*ஆமாம் தானே* என்றும் கேட்டார்.

*பெரும் குடிகாரர்கள் கூட சற்று முயன்றால் திருந்தி விடும் கட்டத்திற்கு வந்து விட்டனர்.*
*இது எப்பேர்பட்ட வாய்ப்பு?*
*இது மட்டுமா?*
*தூய்மை குறித்த சிந்தனை, பொருளாதரம் குறித்த எண்ணங்கள், சேமிப்பின் வலிமை , ஒரு மனிதனின் வாழ்வு அவனை மட்டுமே சார்ந்ததல்ல - அவன் சமூகத்தில் ஒரு அங்கம் போன்ற இச் சிந்தனைகளை எந்த கல்லூரி போதித்துள்ளது.?*
*ஒரு முள்ளுருண்டைக் கிருமி போதித்து விட்டதே இது என்ன சாதாரண விஷயமா? என்று கேட்டு சிரித்தார்.*

*தீமையில் ஒரு சில நன்மைகளாக இவைகளை கருதலாம் - அன்றாடம் உழைத்தால் தான் சோறு என்று லட்சத்தில் அல்ல கோடியில் உள்ளனரே இவர்களின் வாழ்வாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறதே? என்றேன்.*
*எல்லாம் இன்னும் சில நாட்களே ...*
*May- 5ம் தேதிக்கு பிறகு பாரதம்* *புத்துயிர் பெற்று நடை போடும்.* *உலகிலேயே பாதுகாப்பான பண்பாடுடைய நாடு பாரதம் மட்டுமே என்று இங்கே இனி முதலீடுகள்* *செய்ய வளர்ந்த நாடுகள் முன் வரும்.*
*2020 ல் வல்லரசாகியிருக்க வேண்டும் என்பது தான் சற்று மாறிப் போய், இப்போது தான் அதற்கான விதை விழுந்துள்ளது.*
*2025ல் நாம் பூத்துக் குலுங்க ப் போவதை நீ காண்பாய் . உலகத்திற்கு இப்போது தான் யார் யார் எப்படி என்று தெரிய வந்துள்ளது.*
*தெரிவித்துள்ளது கொரோனா.*
*இது புரிந்து ,ஒன்றுபட்டு இதை வென்று பின் இதற்கு நன்றி சொல்லுங்கள் -*
*பாரதத்திற்கு அசுரங்களும் கிருமிகளும் புதியவை அல்ல ,*
*நரகாசுரனால் தீபாவளி, சூரபத்மனால் கந்த சஷ்டி - அது போல் கொரோனாவால் நாம்* *வல்லரசாவோம்*
*நம்பிக்கையோடிரு* என்றார். *இருந்துதான்பார்ப்போமே..?*

சித்தன் வாக்கு சிவனின் வாக்காயிற்றே?

🇮🇳🙏🇮🇳
You can follow @Raamraaj3.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: