"ஏளனம் செய்வது யார் ஃபார்முலா..?"

இணைய தலைமுறை, வளரும் காலத்திலேயே புதிய பிரச்சார முறையை பார்த்தே வளர்கின்றனர். அதுதான், ஏளனம் செய்யும் பிரச்சார முறை. தனது எதிரியை மிக கேவலமாக ஏளனம் செய்து, அவர் மீதான மக்களின் மதிப்பை மழுங்கச் செய்து, அவர்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும்
உத்திதான் இவர்களின் நோக்கம்.

தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சியில் இருந்த போதுகூட பதில் அறிக்கைகள் பறக்குமே தவிர, ஒருவரையொருவர் தரம் தாழ்ந்து ஏளனம் செய்தது கிடையாது. ஆனால், தமிழகம் சில ஆண்டுகளாக இந்த முறைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏளன பிரச்சார முறையை கையிலெடுத்தவர்கள் இந்துத்வ பாஜக என்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது. இவர்களின் தொடக்கமே அப்படிதான். இதிகாசங்களில்கூட இவர்களின் எதிரிகளாக சித்தரிக்கப்பட்ட அரக்கர்களை, அழுக்காக தொந்தியும் தொப்பையுமாக, முறையற்ற சிகையலங்காரத்துடன்தான் உருவகப்படுத்தினர்.
புத்தரை கேலி செய்யும் விதமாக தொப்பையும் யானை தலையும் கொண்டு உருவகப்படுத்தியதுதான் விநாயகர் என்ற கதையும் சொல்லப்படுவதுண்டு. இப்படி எதிரிகளை ஏளனம் செய்து மக்கள் மத்தியில் அவர்களின் இமேஜை உடைப்பதுதான் இந்துத்வத்தின் வேலை.

இதில் சிக்கி நாசமாக போனவர்தான் விஜயகாந்த்.
தினமலம் பத்திரிக்கை இவரை வேண்டுமென்றே உசுப்பி, அதன் மூலம் அவர் ஏளனம் செய்யப்பட்டு மூன்றாவது பெரிய கட்சி என்ற அடையாளத்தை அழித்ததுதான் இந்துத்வ பாஜகவின் மிகப் பெரிய வெற்றி.

ராகுல் காந்தியை 'பப்பு' என்று கிண்டல் செய்து, அவர் ஒன்றுக்கும் லாயக்கற்றவர் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில்
தொடர்ந்து பரப்பி வந்தனர். இதனால், ராகுல் காந்தியால் ஒரு மாற்றமும் நடக்காது என நினைத்து மோடிக்கு வாக்களித்த வடக்கர்கள் ஏராளம்.

இதே உத்திதான் தற்போது ஸ்டாலினுக்கும் அப்ளை செய்யப்படுகிறது. Mrs என்பதை எம்.ஆர்.எஸ் என கூறிய மோடி, கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என கூறிய எடப்பாடி
ஆகியோர் பெரிய அளவுக்கு கிண்டலுக்கு ஆளாகாத நிலையில், சிறிய தவறுக்குகூட ஸ்டாலின் ஏளனத்துக்கு உள்ளாகிறார் என்றால், இந்துத்வ பாஜக ஐடி விங் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஸ்டாலினால் ஒன்றும் உருப்படியாக செய்ய முடியாது, துண்டுச் சீட்டு, மிசா
என ஏதாவது ஒருவகையில் அவர் தொடர்ந்து ஏளனம் செய்யப்படுகிறார். இதன் மூலம், swing voters-ஐ திமுக பக்கம் திரும்பாமல் பார்த்துகொள்கின்றனர். இதுதான் அவர்களின் டாஸ்க்.

விஜயகாந்த், ராகுல் காந்தி ஆகியோருக்கு நடந்ததுதான்
தற்போது ஸ்டாலினுக்கும் நடக்கிறது. ஆகையால், ஸ்டாலினின் இமேஜை மிகப் பெரிய அளவில் உயர்த்த திமுக படுவேகமாக, focused ஆக செயல்பட வேண்டும்.

பத்திரிக்கையாளர் மதன், focused ஆகதான், ஸ்டாலின் இமேஜை உடைக்க முயல்கிறார். அதற்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுக்காமல் திமுக செயல்பட வேண்டும்.
கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்காமல், கேள்விகளை கேட்கும் இடத்துக்கு திமுக வரவேண்டும்.

மதன் நிகழ்ச்சியில் அந்த விலையில்லா அரசியல் விமர்சகர் ஏன் தினமும் கலந்துகொள்கிறார் என்றால், அவர்களின் நோக்கம் திமுகவுக்கு எதிராக வேலை செய்வது. அந்த விலையில்லா அரசியல் விமர்சகரும்,
தன்னை பிராமணராக காட்டிக்கொள்ளும் ஒரு பெண் எழுத்தாளரும் என சிலர் ஒன்றாக இணைந்துதான் திமுகவுக்கு எதிராக செயல்படுகின்றனர். என்னென்ன கேள்விகள் கேட்கலாம், எதை எதையெல்லாம் ட்ரண்டிங்காக்கலாம் என குரூப் டிஸ்கசன் நடக்கிறது என்றும் கேள்விப்பட்டேன்.
மதன் எனது நண்பர்தான். அவரது வேலையை சரி தவறு நான் இங்கு கூறவில்லை. அவர், வலது திசையில் பயணிக்கிறார். அவரைப் போன்றோரை திமுக பார்த்தே வந்திருக்கிறது; இனியும் பலரை சந்தித்து சமாளித்தே செயல்படும்.

மதன் கூறுவதெல்லாம் சரி என்று இருக்க வேண்டிய அவசியமில்லை;
ஆனால், அது அவரது உத்தியாக இருக்கலாம் அல்லவா..! அவர்களுக்கு விடை தேவையில்லை. Swing voters-ஐ குழப்பிவிட நேரம் கிடைத்தால் போதும். அதற்கான அவகாசத்தையும் வழியையும் திமுக கொடுக்காமல் இருக்க வேண்டும். அதனால், பதில் கூறுவதுடன் கேள்வி கேட்பது திமுகவுக்கு இன்னும் முக்கியம்.
ஜியோ பல்கலைக்கழகம், குட்கா ஊழல், சேகர் ரெட்டி, தேசிய கல்விக்கொள்கை, ரஃபேல் என அதிமுக-பாஜக கூட்டணியை குடைந்தெடுக்க ஓராயிரம் விஷயம் உள்ளது. தினம் ஒரு கேள்வியை ட்ரண்ட் செய்ய திமுக ஆதரவாளர்கள் முன்வர வேண்டும்.

எம்.எஸ்.விஸ்வநாதன்
(முகநூல் பதிவிலிருந்து)
You can follow @realtechsiva.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: