உடல்(மன) நலம்

உடலில் ஏற்படும் நோய்களுக்கு, மனம் எவ்வாறு காரணமாகிறது என்பதையும் பற்றியும், உணர்ச்சிகளை வெளியேற்றாமல் நீண்ட காலம் அடக்கப்படும்போது ஏற்படும் உடலியல் பாதிப்புகள் & நோய்கள் பற்றியும் விளக்கும் இந்த தொடர் பதிவில், "சோகம், (கவலை) sadness" எனும் உணர்ச்சியை
வெளியேற்றாமல் அடக்குவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் நோய்கள் பற்றி உங்களுக்காக....

சோகம் & கவலை (Sadness)

சோகம் நல்லது;
கவலை கெட்டது..!

சோகத்தை வெளியேற்றாமல் அடக்கும்போது,அது கவலையாக மாறுகிறது.

"கவலை இல்லாத மனிதரே, இவ்வுலகில் இல்லை" எனலாம்.!
உடலுக்கோ,மனதிற்கோ பிரச்சனை
வரும்போது,அப்பிரச்சனையை எதிர் கொள்ள போதிய பலம் இல்லாததாக நாம் கருதும் மன நிலையே "கவலை".

கவலை வேறு;
பொறுப்புணர்ச்சி வேறு.

கவலைக் கூடாது என்பதற்கு, பொறுப்புணர்ச்சிகள் & எதிர்க்காலம் குறித்த திட்டமிடல் இவைகளைத் தவிர்க்க வேண்டும் என்பது அர்த்தமல்ல.

பொறுப்புணர்ச்சிகள் அவசியமானவை;
பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது நமது கடமை.
ஆனால்,மாறாக நமக்கு நாமே பின்னிக்கொள்ளும் விஷ வலையே கவலை.

சோகம் (கவலை)க்கானக் காரணங்கள்:

* விரும்பத்தகாத நிகழ்வுகள்

* கணவன் மனைவி மரணம் அல்லது நிரந்தரப் பிரிவு

* நேசத்திற்குரிய உறவுகளின் எதிர்பாராத மரணம்
* விபத்துக்கள்,உடல் உறுப்பு இழப்புக்கள்

* சரியான வேலை கிடைக்காத நிலை

* முதிர் கன்னி,திருமண வயதை கடந்தும் திருமணமாகாத நிலை

* குழந்தையின்மை

* பொருளாதாரப் பிரச்சனைகள்

இன்னும் இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சோகம் ஏற்படுகிறது,பின்பு அதுவே கவலையாக மாறுகிறது.
சோகம் மற்றும் கவலைப்படும்போது "கார்டிசால் ஹார்மோன்" எனும் ஹாரமோன் நம் உடலில் சுரக்கிறது.

சோகம்,கவலை உணர்வை முழுமையாக வெளியேற்றாமல் நீண்ட காலம் அடக்கும்போது சோகம்,கவலை காரணமாக சுரந்த கார்டிசால் ஹார்மோன் வெளியேற வழியின்றி,நம் உடலிலேயே தங்கிவிடும் அபாயம் உள்ளது.
அதே சோகத்தை / பாதிப்பை மீண்டும்,மீண்டும் நினைத்து கவலைப்படும்போதும் கார்டிசால் ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, உடலில் பல்வேறு பாதிப்புகளையும்,நோய்களையும் தோற்றுவிக்கின்றது.

Cancer (புற்று நோய்)

கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களை காட்டிலும்,
பெண்களே அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ( World-Health-Organization) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்?

புகைப் பிடித்தலும்,மது அருந்துவதும்,சுகாதாரமற்ற உணவுப் பழக்கவழக்கங்களுமே, புற்று நோய்க்கு காரணமென
உருவகப் படுத்தப்பட்டு வரும் நிலையில்,பாரம்பரிய, கலாச்சாரமிக்க நமது நாட்டில், ஆண்களைவிட மிக குறைவான எண்ணிக்கையிலான பெண்களே, மது அருந்துதல்,புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை கொண்டுள்ளனர்.

இதேப்போலவே சுகாதாரமற்ற உணவுகளைக்கூட ஆண்களை காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலான பெண்களே
எடுத்து கொள்கின்றனர்.

அப்படியெனில், ஆண்களைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் புற்று நோய் பாதிப்பிற்கு ஆளாக காரணமென்ன..?

Drunk and Drive அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் அனைவருமே விபத்துக்குள்ளாவதில்லை,
ஆனால்
(தொழில் நுட்பக் கோளாறு அல்லாத விபத்துக்களில்) விபத்துக்குள்ளான வாகன ஓட்டிகளில் 65% முதல் 75% மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களே.

ஆம்,இதே போல்தான் புற்று நோய் பாதிப்பும்.
அதீதக் கவலைப்படும் அனைவருக்குமே புற்று நோய் வந்துவிடுவதில்லை.
ஆனால்,புற்று நோய் பாதிப்பிற்குள்ளானவர்களில்
70% to 85% பேர் அதீத மனக் கவலையால் கடும் மன உளைச்சளுக்கு நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்தவர்களே என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக அடக்கப்படும் அதீத கவலையே (கார்டிசால் ஹார்மோன்) புற்று நோய்க்கு முக்கியக் காரணமாகி்றது என்றால் மிகையாகாது.
நீண்ட காலம் அடக்கிய சோகத்தால்(கவலையால்) ஏற்படும் உடல் பாதிப்புகள் & நோய்கள்:

* Addiction - தவறான பழக்கங்களுக்கு அடிமையாதல்

* Alcoholism - மது அடிமை

* Allergy - ஒவ்வாமை

* Anorexia - பசியின்மை

* Back (middle) pain - நடு முதுகு வலி

* Chest (left) pain - இடது மார்பு வலி
* Breaking problems - சுவாசக் கோளாறுகள்

* Cancer - புற்று நோய்

* Feet problems - கால் பாதம் பிரச்சனைகள்

* Headache - தலைவலி

* Importance - ஆண்மையின்மை

* Lungs problems - நுறையீரல் பிரச்சனைகள்

* Migraine headache - ஒற்றை தலைவலி

* Menstrual imbalance - மாதவிடாய் பிரச்சனைகள்
* Stomach & intestine problems - வயிறு & குடல் தொடர்பான பிரச்சனைகள்

* Stroke - பக்கவாதம்

* Thyroid problems - தைராய்டு பிரச்சனை

* Ulcers வாய், - வயிற்றுப் புண்கள்

* Tumors - கட்டிகள்

SADNESS THERAPY:

நீண்டகாலமாக அடக்கியுள்ள சோகம் (கவலை ),வெளியேற வழியின்றி,
பல ஆண்டுகளாக உடலில் தேங்கி,நோய்களை ஏற்படுத்திவரும் "கார்டிசால் ஹார்மோன்" அமிலத்தை PSYCHOTHERAPY (SADNESS THERAPY) எனப்படும் உளவியல் சிகிச்சை மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றி,அந்த அமிலத்தால் ஏற்பட்ட உடலியல் பாதிப்புகளிலிருந்தும்,நோய்களிலிருந்தும் முழுவதுமாக குணம்பெற்று,நலம்பெற இயலும்
மாறிவிட்ட நுகர்வு கலாச்சார உலகில் வாழ்வியல்,உணவுமுறை என சகலத்தையும் மாற்றி தற்போது அவர்களின் நிலை அவர்களுக்கே தெரியாத ஒரு துர்பாக்கிய மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதே கசக்கும் உண்மை.

உங்களின் உடல்நலம் மட்டுமின்றி மனநலத்திலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்

நன்றி 🙏
You can follow @NiRa_twits.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: