சோமீயில் விரவிக்கிடக்கும் குப்பைகளுக்கு இடையே அவ்வப்போது அருமையான முத்துகளும் கிடைக்கும். அப்படிக் கிடைத்த ஒன்று, நேற்று ஒரு திரியில் திருக்குறளைப் பற்றிய விவாதத்தில் இருந்தது.

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்ற குறளை +
ஆரம்பத்தில் தெய்வத்தால் கூட ஆகாத விஷயங்கள் என்று சில உரைகளில் படித்து அதெப்படி தெய்வத்தால் ஆகாது, அப்படியென்றால் அது தெய்வமே இல்லையே என்று யோசித்ததுண்டு. பின்னர் பரிமேலழகர் உரையைப் படித்த போது ‘முயன்ற வினை பால்வகையான் கருதிய’ என்று சொல்வதால் ஏதோ வினையைப் பற்றிக்கூறுகிறார் +
என்று புரிந்தது. ஆனாலும் அது தெளிவாக இல்லை. நேற்று முனைவர் சங்கரநாராயணன் அருமையான ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்திருந்தார். அது

“ப்ரதிகூலம்ʼ ததா தைவம் பௌருஷேண விஹன்யதே” என்பது. அதாவது சாதகமில்லாத தைவம், அதாவது ஊழ், பௌருஷத்தால் (முயற்சியால்) உடையும் என்பது பொருள்.
இதைத்தான் தெய்வத்தான் (போகூழால்) ஆகாதெனினும் முயற்சியால் அந்த ஊழை வெல்லலாம் என்கிறார் வள்ளுவர். அங்கே தைவம் என்று சொல்லப்படுவதுதான் இங்கே தெய்வமாயிற்று. ஆக, இரண்டிற்கும் அடிப்படைக்கருத்து ஒன்றேதான்.
You can follow @tskrishnan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: