Chipகளில் அடங்கும் உலகமென்றாலும் வா..சிப்பு தொடர்கிறதுதானே..
புத்தகங்கள் பற்றி ஒரு கேள்வி இழை.
புத்தகங்கள் பற்றி ஒரு கேள்வி இழை.

1. வாசிப்பின் தேவை என்ன?
2. வாசிப்பினால் வாழ்க்கைக்கு பயனுண்டா?
3. எந்த வகையான நூல்களை விரும்பிப் படிக்கிறீர்கள்?
சரித்திரம்
மொழி
அறிவியல்
நுண்கலை
வணிகம்
வாழ்க்கை வரலாறுகள் இன்ன பிற ,..
சரித்திரம்
மொழி
அறிவியல்
நுண்கலை
வணிகம்
வாழ்க்கை வரலாறுகள் இன்ன பிற ,..
4. எந்த நேரம் நீங்கள் வாசிக்க உகந்ததாக இருக்கிறது?
காலை?
மாலை?
இரவு?
எல்லா நேரமும்?
காலை?
மாலை?
இரவு?
எல்லா நேரமும்?
5. புத்தகத்தின் ஒரு வரி கூட விடாமல் கவனமாகப் படிப்பீர்களா? அல்லது மேம்போக்காக வாசிப்பீர்களா?
6. இந்த வருடம் நீங்கள் எத்தனை புத்தகங்கள் படித்தீர்கள் ?
7. வாங்கி வைத்தும் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் உண்டா?
8. நீங்கள் படித்த புத்தகத்தில் ஏதேனும் ஒன்று , 'இது திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்குமே' என்று ஏதேனும் இருக்கிறதா?
9. உங்களுக்கு எந்த மாதிரியான புத்தகங்கள் பிடிக்கும்?
சிறுகதை
நாவல்
கவிதை
கட்டுரை
பயணக்கட்டுரை
ஆய்வு நூல்
***
பிடித்த நூல்களைக் கூறுங்கள்
சிறுகதை
நாவல்
கவிதை
கட்டுரை
பயணக்கட்டுரை
ஆய்வு நூல்
***
பிடித்த நூல்களைக் கூறுங்கள்
10. ஒரு ஆய்வு நூலைப் படிக்கும் முன் அது ஆய்வு செய்த துறைபற்றி அறிந்து அதன்பின் வாங்குவீர்களா? அல்லது பிறர் சொல்வதால் வாங்குவீர்களா?
11. பயணக்கட்டுரைகள் மூலம் என்ன அறிந்துகொள்வீர்கள்?
12. சிறந்த நூல்கள் என்று சொல்லப்பட்டு, நீங்கள் வாங்கி, பிடிக்காமல் போனது உண்டா?
13. நீங்கள் படித்த எந்தப் புத்தகம் உங்களை அதிகம் சிந்திக்க வைத்தது?
14. நீங்கள் படிக்க என்று வாங்கிய புத்தகத்தால், அதனை புரிந்துகொள்ளவென்றே வேறு புத்தகங்கள் தேடி படித்திருக்கிறீர்களா?
15. உங்கள் கற்பனையை விரிவாக்கும் எழுத்தாளர்கள் என்று எண்ணுவது யார் யாரை?
16. விமர்சனம் பார்த்து புத்தகம் வாங்குவீர்களா? அல்லது எழுத்தாளரின் பெயரைப் பார்த்தா?
17. நீங்கள் படித்த கதைகளை உங்கள் கற்பனை யையும் சேர்த்து பிறருக்கு சொல்வீர்களா?
18.. நீங்கள் எழுத வேண்டும் என்று நினைத்தவுடன் யாரை முன்மாதிரியாக மனதில் வைப்பீர்கள்?
19. உள்ளம் புழுங்கும் மனநிலையில், உங்களை அதிலிருந்து வெளிக்கொண்டுவரும் நூலாக எதாவது இருக்கிறதா?
20. செவிவழி கேட்கும் யூ ட்யூப் கதைகள் உங்களைக் கவர்கிறதா?
காட்சிப்படம் மூலம் கேட்டு ரசிக்கும் கதைகளை திரும்பவும் புத்தகத்தில் வாசித்துண்டா? வாசிப்பில் உங்களுக்கு கதை சொன்னவரின் கற்பனை தோன்றுமா? உங்கள் சுய சிந்தனை தூண்டப்படுமா?
காட்சிப்படம் மூலம் கேட்டு ரசிக்கும் கதைகளை திரும்பவும் புத்தகத்தில் வாசித்துண்டா? வாசிப்பில் உங்களுக்கு கதை சொன்னவரின் கற்பனை தோன்றுமா? உங்கள் சுய சிந்தனை தூண்டப்படுமா?
21. புத்தகக் கண்காட்சிகளில் நீங்கள் எழுத்தாளர்களைச் சந்திருக்கிறீர்களா?
22. ஒரு நடிகரையும், எழுத்தாளரையும் ஒரே விழாவில் பார்க்க நேர்ந்தால் யாரிடம் முதலில் பேச விரும்புவீர்கள்?
23.
2020ல் நீங்கள் படித்த சிறந்த நூல் என்று எந்த நூலைப் பரிந்துரைப்பீர்கள்
2020ல் நீங்கள் படித்த சிறந்த நூல் என்று எந்த நூலைப் பரிந்துரைப்பீர்கள்
மகிழ்வும், நன்றியும் 

Read on Twitter